ஒலிம்பிக்
August 18, 2016 at 1:30 pm 1 comment
ஒரு பதக்கம் கிடைத்து விட்டது. ஒலிம்பிக்கிற்கு சென்ற நமது விளையாட்டு வீரர்களை குறை சொல்லி நிறைய விமர்சனங்கள் இணையத்தில் இருக்கின்றன. அவர்கள் களங்களை அமைக்கும் அரசு தரப்பு சார்பாக (உதாரணமாக, சாய் பள்ளிகள்) விமர்சனங்கள் பெரிதாக எழவில்லை. சாய் பள்ளி மாணவர்களுடன் நான் விளையாடி, பழகியிருக்கிறேன். துடிப்பானவர்கள். ஒரே குறை பயிற்சியாளர்கள்.
விளையாட்டு வீர்கள் எழுந்து வர வேண்டுமென்று தேட வேண்டியதில்லை. அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பயிற்றுவிக்கதான் ஆட்கள் இல்லை. வல்லரசு ஆக வேண்டுமென்ற கனவு இருக்கின்ற நாடு, உலக அளவில் விளையாட்டு போட்டிகளில் வெல்ல தடுமாறிக் கொண்டிருந்தால் எப்படி? சீனப் பொருட்கள் தரத்திலும் விலையிலும் மலிவானவை என நம்புகிறோம். ஒலிம்பிக்கில் அவர்களது பதக்கப்பட்டியல் அதை மறுக்கிறது.. இராணுவ ஆட்சி, மக்களாட்சி என்றெல்லாம் ஜல்லியடிக்க வேண்டியதில்லை.
தற்சமயம் சென்ற வீரர்களை குறை சொல்லி பயனில்லை. உண்மையில், வீரர்களை குறை சொல்லவே கூடாதென்றே நினைக்கிறேன். அவர்களை தேர்வு செய்யும், பயிற்றுவிக்கும் ஒரு மாபெரும் அசமந்தமான அரசு இயந்திரம் ஒன்று உள்ளது. அதை மாற்றினாலே போதும். அதுவும் ஏறக்குறைய அனைவருக்கும் தெரியும்.
ஒவ்வொரு நாளும், பதக்கப்பட்டியலுள் வந்து விட்டோமா என பார்க்கும் என் கோபத்தை எவ்வாறுதான் காட்டுவது? விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம், இதை படிக்கும் யாருக்கெனும் வந்தால், அவர்கள் வாழ்க்கையில் விளையாட்டை வேடிக்கை பார்த்தவர்களாகதான் இருப்பார்கள்.
ஐயா, மூடிக் கொண்டு போங்கள்.
கிரிக்கெட் ஒருவேளை ஒலிம்பிக் விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டால், அப்போது தெரியும் நமது தகுதி.
Entry filed under: Hunter's Mind.
1.
King Viswa | August 19, 2016 at 7:18 pm
//கிரிக்கெட் ஒருவேளை ஒலிம்பிக் விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டால், அப்போது தெரியும் நமது தகுதி//
ஓஹோ, அப்படியா?