Archive for July, 2015

குதிரை வீரன் குணா அத்தியாயம் 9 உளவாளி

அவளை கண்டதும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தவனை, இளவரசி பூங்காவனம்  தொடைகளுக்கு நடுவில் ஒரு உதையை விட்டு அடக்கினாள்.

மூடனே, உன்னால் எனக்கு எவ்வளவு பிரச்சினைகள் தெரியுமா?

கண்ணீருடன், அது பற்றி தன்னால் ஊகிக்க இயலவில்லை என கூறி, ஒரு அறையை பெற்றான்.

உன்னை இங்கேயே கொன்று, நீ இருந்த அடையாளமே இல்லாமல் ஆக்க என்னால் முடியும். ஆனால் உன்னால் ஒரு வேலை ஆக வேண்டியதிருக்கிறது.

உன்னை வைத்தே சில அரசியல் நிகழ்வுகளை செய்ய உத்தேசித்திருக்கிறேன். அதற்கு நீ ஒத்துழைத்தால், நீ உயிர் பிழைப்பது மட்டுமின்றி, பரிசிலும் கிடைக்கும். என்ன சொல்கிறாய்?

நான் சிறிது யோசிக்க வேண்டும், இளவரசி.

காவல் தலைவன் மாரி குணாவின் தாடையை முரட்டுத் தனமாக திருப்பி

டேய், உனக்கு எப்பேர்ப்பட்ட பரிசில் கிடைக்க போகிறது, அதைப் போய் வேண்டாம் என்கிறாயா? முட்டாளா நீ?

    ஒருவனிடம் முதல் முறையாக அடி வாங்கும்போது இருக்கும் பயம், பலமுறை சாத்தப்பட்டவுடன் வெகுவாக குறைந்து விடுவது உலக நியதி. அரசுப் பள்ளிகளில் சுமாராக படித்தவர்களுக்கு இது நன்றாக தெரியும்.

ஆகவே அத்தனை அடி வாங்கியும், சலிப்புடன் குணா சொன்னான்

அன்னத்திற்கே வழியில்லை, ஆட்டக்காரிக்கு ஆயிரம் பொன்னா?

 

(குணாவுக்கும் நேரும் இக்கொடுமை என்று முடியுமோ?)

July 13, 2015 at 1:20 pm Leave a comment


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
July 2015
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031