Archive for January, 2011

சித்தர் பாடலும், சீவக சிந்தாமணியும் சூப்பர் ஹீரோக்களின் சஞ்சலங்களும்

கேளடா, மானிடா, காதலெண்ணும் ஒரு கண்ணி

வெளியே சுற்றித் திரியும் ஒரு பன்னி,

வீணாக பெண்களை மனதில் எண்ணி

துடிக்கிறடா கனவில் உந்தன் ……………..

தாடிச் சித்தரின் முழுமை பெறாத ஒரு  பாடல், பழங்கால ஒலைச்சுவடியில் காணப்பட்டது.  காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.

      உங்களில் பலருக்கு மாணவ பருவத்தை அறவே மறந்து போயிருக்கலாம்.  பள்ளிகளில் கூடப் படித்த பெண்களை தவிர கற்றவை அனைத்துமே மறந்து போயிருக்கலாம்.  அது நியாயம்தான்.  பரீட்சையின்போது நினைவுக்கு வராத ஒரு விடை பள்ளிக்கு வெளியே சென்றதும் நினைவு வரும் அனுபவம் அனைவரும் அடையும் ஒன்றே. ஆனால் ஒரு மழைக்கால இரவில் (ஒவ்வொரு பிரபல கதாசிரியருக்கும் உள்ள தனித்துவம் போல, எனக்கு மழைக்கால இரவு) உறக்கம் வராத நேரத்தில் எனக்கு தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் யாவை என்ற கேள்விக்கு பதில் பளீரென இருபது ஆண்டுகளுக்கு பிறகு நினைவு வந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும்.

           தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றுதான் சீவக சிந்தாமணி.  சீவகன் என்னும் இளவரசனே  கதை நாயகன்.  இந்த இளவரசன் எவ்வாறு அரசானாகிறான் என்பதுதான் இக்காப்பியத்தின் கதை. சுப முடிவுள்ள காப்பியம்.

             சித்தர்கள் சொன்னார்கள் என தமிழகத்தில் நிறைய சொற்றொடர்கள் உலவிக் கொண்டிருக்கின்றன.  சித்தர் பாடல்கள் எனவும் புத்தகங்கள் பல உள்ளன.  உண்மையில் சித்தர்கள்தான் இவற்றை எழுதினார்களா என்பது முற்றிலும் நம்பிக்கை சார்ந்ததாகவே உள்ளது. 

        சீவகன் மாபெரும் வீரன்.  இளவசரனாக பிறந்தும் கர்வம் கிஞ்சித்தும் இல்லாதவன்.  பிறன்மனை நோக்காதவன்.  எட்டு மனைவிகள்.      வாரத்திற்கோ ஏழு நாட்கள்தான்.

         சித்தர்களை யாரும் பார்த்ததில்லை என்பதால் இத்தகைய பாடல்களுக்கு பெரிய மரியாதை இருந்தது.  இதுவே இப்பாடல்களின் நம்பகதன்மையை பெரிதும் சந்தேகத்துள்ளாகி விட்டது.  அடாபுடாவென எழுதினால் சித்தர் பாடல் என்ற கட்டுக்கோப்பினை உருவாக்கி புதிய பாடல்கள் இதில் வந்து கலந்து விட்டன.

         குதிரையின் மீதேறி கடும் துரத்தலுக்கு பிறகு வனக் கொள்ளையர் கும்பலை காவல் துறையினரிடம் ஒப்படைத்த முகமூடி வீரர் மாயாவி ஆயாசத்துடன்  தன் குகைக்கு திரும்பி, தன் உதவியாளரிடம் தவிடு ஒத்தடத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.  இன்னும் சில நாட்களுக்கு உள்ளாடை அணிவதில்லை என்று முடிவு செய்துக் கொண்டார்.

             கோதம் நகரில் தன் நண்பி மேரி ஜேனுடன் சரசத்தில் ப்ரூஸ் வாய்னே இருந்தபோது அவரின் ஜன்னல் வழியே வவ்வால் படம் போட்ட விளக்கு எரிய ஆரம்பித்தது.  “தாயோளி, எந்த நேரத்தில் கூப்டறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை” என அலுத்துக் கொண்டே தன்னுடைய சீருடையை அணிய விரைந்து சென்றார்.  சீருடை போடுறவன்களை இனிமே சிநேகம் பண்ணிக்கக் கூடாது என முடிவு செய்த மேரி ஜேன் குப்புற படுத்துக் கொண்டாள்.

          மிஸ்டர் பன்டாஸ்டிக் என்றழைக்கப்படுகிற ரீட் ரிச்சர்ட்ஸ் தன்னை யாரும் கவனிக்கவில்லை என ஊர்ஜிதம் செய்துக் கொண்டு அந்த மூத்திர சந்தில் நுழைந்தார்.  கதவிலக்கம் 58-ஐ நெருங்கிய அவர் கதவை தட்ட, கதவும் திறந்தது.  கதவை திறந்தவனுக்கு வயது நாற்பத்தியெட்டு இருக்கலாம்.  கூட இரண்டோ, மூன்றோ குறையலாம்.  அவன் பார்வையில் கேள்வி இருந்தது.  “”உடும்பு தைலம் ஒரு பாட்டில் அவசரமாக வேண்டும்" என்று கேட்ட ரீட் ரிச்சர்ட்ஸ் குரலில் கெஞ்சல் இருந்தது.  நாளைய தினம் அவரின் கல்யாண நாள்.

           பின் குறிப்பு இந்த பதிவு நான்-லீனியர் என்ற முறையை பின்பற்றி எழுதப்பட்டது.  இதை நீங்கள் படித்து ஏதாவது புரிந்துக் கொண்டால் இதை முதன் முறையாக எழுதிய என்னுடைய தவறுதான்.  வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படாது என உறுதியளிக்கிறேன்.

          “சீவக சிந்தாமணி” என்று வார்த்தையை கூகிளில் தேடி இந்த பதிவை கண்டடைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

January 30, 2011 at 2:04 pm 9 comments

புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி?

         சென்னை புத்தகக் கண்காட்சியின் மகத்தான, மாபெரும், அட்டகாசமான வெற்றிக்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புத்தக கண்காட்சிகள்  நடத்தப்பட வேண்டுமென்று நிறைய பேர் நினைக்கின்றார்கள்.  ஆனால் எவ்வாறு நடத்துவது அது தொடர்பான கேள்விகளை யாரிடம் கேட்பது என தயக்கமும் அவர்களிடத்தில் இருக்கிறது.   சில முக்கிய கேள்விகளுக்கு பதில்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.  

முதலில் எதற்காக புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும்?

        புத்தகங்களை விற்பதற்குதான். 

அதற்காக கண்காட்சி என்று தனியே நடத்த வேண்டுமா? 

      வீட்டு உபயோகத்திற்கு தேவையில்லாத பொருட்களை மக்கள் கண்காட்சிகளில்தான் வாங்குகிறார்கள்  என்பதால் கண்காட்சி நடத்த வேண்டியது அவசியமே.

கண்காட்சிக்கு பெயர்?

           கண்டிப்பாக வைக்க வேண்டும்.  பெயரின் முடிவில் கண்காட்சி என முடிய வேண்டும்.  ஆரம்பத்தில் எந்த நகரத்தில் நடத்தப்படுகின்றதோ அந்த நகரத்தின் பெயரை வைக்கலாம்.  இவற்றின் நடுவில் கண்காட்சியின் முக்கிய நோக்கத்தை புகுத்த வேண்டும்.

          உதாரணத்திற்கு, சென்னை புத்தக கண்காட்சி, மதுரை புத்தக கண்காட்சி, கோவில்பட்டி வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி.

இடத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

       மக்கள் தொகை நெரிசலான, போக்குவரத்திற்கு சற்றும் வசதியில்லாத இடத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும்.  அப்போதுதான் கண்காட்சிக்கு கவர்ச்சி. 

          தேர்ந்தெடுத்த இடத்தை சுற்றி டிக்கெட் கவுண்டர்கள் மட்டும் அமைக்க இடம் விட்டு முழு சுவரெழுப்பி, பட்டிப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

வெளிப்புற அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?

            கண்காட்சிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை உடன் நிறுத்தி விட்டு வருமாறு/செல்லுமாறு எக்காரணம் கொண்டும் வெளிப்புற அமைப்பு இருந்துவிட கூடாது.

           வாகனங்களை நிறுத்த உதவி செய்யும் சீருடை அணிந்த ஆட்கள் கன கம்பீரமாக கண்காட்சியின் வாயிலில் இருக்க வேண்டும்.  அவர்கள் அந்த ஊரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.  அவர்களுக்கு “கார் அங்கிட்டு, பைக் இஞ்சே” என சொல்லத் தெரிந்தாலே போதுமானது. மீதியை கண்காட்சிக்கு வருபவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  டபிள் பார்க் நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று.

            200 அடி இடைவெளி விட்டு மூன்று அல்லது நான்கு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும்.  ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே செயல்பட வேண்டும்.  வருபவர்கள் சற்று குழம்பி தேடி அலைய வைத்து டிக்கெட் வாங்க வைக்க வேண்டும்.  இது தங்கள் வாகனங்களை நிறுத்த அலைந்து  கொலைவெறியுடன் உள்ளே வருபவர்களின் மனநிலையை முற்றிலும் மாற்றி விடும்.

            கண்காட்சிக்கு வெளியே பலூன், பப்பரமிண்ட், துப்பாக்கி சுடுதல், ஆதிவாசிகளின் நாட்டு மூலிகை, பால்கோவா, பப்பாளி பழத்தை அதிகமாக போட்டு செய்யப்படும் பழ சாலட், கைரேகை, கம்யூட்டர் ஜோசியம் போன்ற கடைகள் தானாகவே உருவாகிவிடும்.  இதற்காக  அமைப்பாளர்கள் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கத் தேவையில்லை.

       உடுமபு தைலம் விற்பவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்காதீர்கள். 

கழிப்பிடங்கள் அவசியமா?

             கழிப்பிடங்கள் இடத்தை வீணாக அடைப்பவை.  மேலும் அவை இலவசம் என்பதால் பைசா தேறாது.  கண்காட்சி காலை 11 மணியளவில்தான் ஆரம்பிக்கிறது.  அதுவோ காலைக்கடன்.   அதனால் கழிப்பிடங்கள்  அவசியமில்லை. 

       ஆனால் சிறுநீர் கழிப்பான்களை அமைக்க வேண்டும்.  அதற்கு ஒரு கணித சூத்திரம் உள்ளது.  கண்காட்சிக்கு ஒரு நாளில் வரும் மக்களின் மொத்த எண்ணிக்கைக்கு மூன்று ஸ்கொயர் ரூட் எடுத்து வரும் தொகையில் சிறுநீர் கழிப்பான்களை வைக்க வேண்டும்.

           உதாரணத்திற்கு, கண்காட்சிக்கு ஒரு நாளில் ஒரு இலட்சம் பேர் வருகிறார்கள் என்றால், மூன்று ஸ்கொயர் ரூட்களுக்கு பிறகு 4.21 என விடை வருகிறது.  மாநகராட்சிகளில் கண்காட்சி நடப்பதாக இருந்தால் ஐந்து என ஆக்கிக் கொள்ளலாம்.

          கேன்டீன் பக்கம் வைப்பதே மரபு.

கலை நிகழ்ச்சிகள்?

             பட்டி மன்றம், சொற்பொழிவுகள் வைப்பதே மரபு. நாட்டுப்புற குத்து நடனத்தில் கதக்களியின் ஆதிக்கம் இருக்கின்றதா/இல்லையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் வைக்கலாம்.   யாரை வேண்டுமானாலும் பேச கூப்பிடலாம்.   கூட்டம் இருந்தாலும், மக்கள் அங்கே வெறித்த பார்வையுடன்தான் அமர்ந்து இருப்பார்கள்.  “தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல, சீனாவின் அங்கம்” என்று சொன்னாலும் எந்த சலனமும் இருக்காது.   

கண்காட்சிக்கு உள்ளே?

             அதை பதிப்பாளர்கள் பார்ததுக் கொள்வார்கள்.  ஒருவித புழுக்கமான நிலை நிலவும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  இலக்கிய சூழ்நிலை அது.  

நடந்து முடிந்த சென்னைப் புத்தக கண்காட்சியில் உங்களை கவர்ந்த அம்சங்கள்?

          அரங்கம் முழுவதும் மேடு பள்ளமுமான கார்ப்பெட் போட்டு அதில் மக்கள் விழுந்தெழுந்தது நல்ல நகைச்சுவை காட்சி.  இந்த கண்காட்சிக்கு வந்த மேற்க்கத்தியர்கள் கண்காட்சியின் உள்ளே விற்கப்படும் காப்பியினை குடிக்கும்போது அவர்களின் முகத்தை பார்க்க வேண்டுமே!  ஹாஹாஹாஹாஹஹா!  ஜெய்ஹிந்த்!

January 27, 2011 at 9:09 pm 10 comments

Engineering Fluid Dynamics and Mixing – C K Chopra

நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்ட எனக்கு ஒரு மழைநாளின்போது படிக்க புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை.  நாட்டில் பல பேர் வீட்டில் கேபிள் கனெக்ஷனே இல்லை, இதை ஒரு பெரிய விஷயமாக சொல்ல வந்துவிட்டானே என ஒரு சாதாரண வாசகன் நினைக்கலாம்.  ஆனால் ஒரு இலக்கிய வாசகன் (இனி இப்பதிவில் அவன் இலக்கியன் என குறிப்பிடப்படுவான்) அவ்வாறு எண்ண மாட்டான்.

எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் உள்ள எண்ணிக்கை இடைவெளி வெகுவாக குறைந்து வரும் இந்த நேரத்தில் நல்ல ஆசிரியர்களை அறிமுகப்படுத்துவது ஒரு இலக்கியனின் கடமை.  நல்லது.  அந்த மழைநாளுக்கு திரும்புவோம்.  என் தமையனின் பழைய பொறியியல் புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருகையில்தான் எனக்கு கிடைத்தது அந்த இலக்கிய பொக்கிஷம்.  சி கே சோப்ரா எழுதிய Engineering Fluid Dynamics and Mixing.

சில பக்கங்களை படித்துதான் பார்ப்போம் என துவங்கினேன்.  அடடா…….அடடா!  என்ன வித்தியாசமான அனுபவம்! வாய் வழியே புகைவிடும் ஒரு அறிமுக புகையாளி மூக்கினாலும் விட முடியும் என அறியும்போது அவனடையும் பரவசத்தை நானும் அடைந்தேன் என்றால் அது மிகையாகாது

Preface என்ற தலைப்பின் கீழ் ஆசிரியர் நூலை தன் பெற்றோர்களுக்கு அர்ப்பணிப்பதாக உருகுகிறார்.  தனக்கு உதவியவர்கள் என நிறைய பெயர்களை குறிப்பிடுகிறார்.  அதில் நிறைய மேற்க்கத்திய பெயர்களும் இடம் பெறுகின்றன.

முதல் அத்தியாயமான Fluid Dynamics – An Introduction –ல் ஆசிரியர் சில அடிப்படை விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார்.  நிறைய குறீயிடுகளும் இடம் பெறுகின்றன.  நமக்கு நன்கு அறிமுகமான /,+,=.% குறியீடுகளோடு வேறு சில குறியீடுகளும் (உதாரணத்திற்கு ∀, ∂,⊕,⊥,∪ இடம் பெறுகின்றன.  நான் முதலில் அவற்றை அந்தரங்க உறுப்புகளை குறிக்கும் குறியீடுகள் என நினைத்தேன்.  அத்தியாயங்கள் செல்ல செல்ல அதற்கு புதிய புதிய அர்த்தங்களை கற்பித்தவாறே திறமையாக இந்நூலை எழுதுகிறார்  சி கே சோப்ரா.

உதாரணத்திற்கு, கீழ்க்கண்ட பகுதியை பாருங்களேன்.

\varphi(y)=a\cos\frac{\pi y}{2}+a'\cos 3\frac{\pi y}{2}+a''\cos5\frac{\pi y}{2}+\cdots.

Multiplying both sides by \cos(2k+1)\frac{\pi y}{2}, and then integrating from y = − 1 to y = + 1 yields:

a_k=\int_{-1}^1\varphi(y)\cos(2k+1)\frac{\pi y}{2}\,dy.

இது போன்று சிரிக்கவும், சிந்திக்கவும் நிறைய பகுதிகள் இந்நூலில் இருக்கின்றன. 

     சில பக்கங்களில் எவ்வித வார்த்தைகளும் பயன்படுத்தாமல் வெறும் குறீயிடுகளை மட்டுமே பயன்படுத்தி நிரப்பியுள்ளது அவரின் புலமைக்கு சான்று. இது போன்ற இடங்களில் ஒரு சாதாரண வாசகன் திகைத்து நிற்பது இயல்பென்றாலும், என்னால் இலகுவாக தாண்டிச் செல்ல முடிந்தது.   வாசிப்பே இயல்பென்று கொண்டவர்களால் எதையும் படிக்க முடியும் என்பதை உங்களுக்கு வலியுறுத்த விழைகிறேன். 

உங்கள் கற்பனைக்கெட்டாத பல படங்கள் இந்நூலில் இடம் பெறுகிறது. 

fluid

இப்படத்தில் நீலக்கலரில் இருப்பதே Fluid என்பதை இப்பதிவை இதுவரை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள்/இலக்கியர்கள் புரிந்துக் கொள்வார்கள்.  பிசிறாக நீலக்கலரில் இருப்பது Fluid சில வேளைகளில் Dynamic-ஆக இருக்கும் போது ஏற்படும் நிலை.  மேலும் இது ஒரு 3D படம்.  இடது கண்ணை மூடிக்கொண்டு உங்கள் கணினியின் வலதுபுறம் 60 டிகிரி அளவில் சென்று பாருங்களேன்.  வியந்துதான் போவீர்கள்.  அலுவலகத்தில் வேலை நேரத்தில் வலைத்தளங்களை படிப்பவர்கள் தயவு செய்து இதை செய்து பார்க்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

எட்டாவது அத்தியாயத்தில் ‘Fluid Dynamic Particles Acceleration, Deacceleration and Reacceleration’ –ல் பார்ட்டிக்கிள்கள் பலவாறு வேகமடைந்து நிதானமடைந்து மீண்டும் வேகம் கொள்வது விவரிக்கப்பட்டுள்ளது.  அங்கே  நயன்தாராவின் படத்தை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தேன்.  மூல புத்தகத்தில் வேறு படம் இருந்திருக்கலாம்.   

இந்த நூலின் முடிவில் இதைத் தொடர்ந்து படித்தவர்களின் கருத்துகள் அழகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘Fuck You, CK’ என்பது தனது தமையனின் கையொப்பத்தில் தெளிவாக உள்ளது.  “I Love You. Shailaja” என்றும் சற்று தெளிவில்லாத கையெழுத்தில் உள்ளது.  யாருடையது என தெரியவில்லை.  அவனின் செல்போனை அடுத்த முறை ஆய்வு செய்தால் கண்டுபிடித்து விடலாம்.

இதை இலக்கியம் என சொல்ல எவ்வாறு சாத்தியம் என்ற கேள்விக்கு, சென்னை புத்தக கண்காட்சி முடிந்த பிறகு இலக்கியம் எவ்வாறு மதிப்பிட படுகிறது என்ற பொது அளவுக்கோல்களின் அடிப்படையில் பார்க்கலாம்.

குழப்பமான அட்டைப்படத்துடன், முன்னுரையை தவிர வேறு எந்த இடத்திலும் தெளிவாக புரிந்து விடாத எழுத்துகள், குறைந்த பக்கங்கள், அதிக விலை. மேலும் படித்தவர்கள் முகத்தில் வரும் மந்த காசம்.

     ஆக இந்த இலக்கிய புத்தகத்தை என் நண்பர்களுக்கு மட்டுமல்லாமல் எதிரிகளுக்கும் பரிந்துரைக்கிறேன்.

 

January 20, 2011 at 9:11 pm 11 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 8 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 9 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 10 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 10 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 10 years ago
January 2011
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31