Archive for May, 2015
குதிரை வீரன் குணா அத்தியாயம் 8 சிறை
நாட்டு நலனுக்காக தன் தந்தையின் உள்ளாடையில் விஷ முள் வைக்கும்போது கூட இளவரசி பூங்காவனத்திற்கு இவ்வளவு மனப்போராட்டம் ஏற்பட்டதில்லை. அவனை என்ன செய்வது என்ற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
வெளியே வந்தவள், காவலன் மாரியை பார்த்து,
எப்படி அந்த விஷமி மாட்டினான்?
இளவரசி, தளபதி காரியும், நானும் ஒரு சத்திரத்தில் இரவு தங்கினோம். அங்கே இருட்டில் ஒரு வாலிபன் அமர்ந்திருந்தான். தளபதி அவனிடம் ஒலைச்சுருளைக் காட்டி, இவனை பார்த்திருக்கிறாயா என வினவ, மூக்கு சற்று நீளம் குறைவாக இருந்தால் இவன் என்னைப் போலவே இருப்பான் என வியப்புடன் கூறினான். அவனை பந்தத்தின் ஒளியில் இழுத்து வந்து பார்க்கையில், புரட்சிக்காரன் குஜாலனேதான்.
சாணக்கியபுரிக்கு தெரியாத வகையில் வணிகர் வண்டியில் ஒளித்து இங்கே கூட்டி வந்திருக்கிறோம்.
நல்ல வேலை செய்தீர்கள், நான் அவனை பார்க்க விரும்புகிறேன்.
தனது கொட்டைகளுக்கு ஏற்பட்ட இக்கட்டு விலகிய உல்லாசத்தில் தளபதி காரி உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தார்.
புதுசா பறிச்ச பச்சிலை போல
வாழத்தோப்பு பக்கம் நிக்கிற ரஞ்சிதமே
என் எச்சகலை மனசுல இருக்குறத
உன் ……
இளவரசியை பார்த்ததும், பாட்டை பாதியில் விட்டு விறைப்பானார்.
நான் அவனை பார்க்க வேண்டும்.
அந்த சிறைக் கதவை பவ்யமாக திறந்தார் காரி.
உள்ளே, கண்ணீருக்கும், சிறுநீருக்கும் மத்தியில் அமர்ந்திருந்தான் இக்காவிய நாயகன் குணா.
(என்னது, இது காவியமா? அடங்……..)
குதிரை வீரன் குணா அத்தியாயம் 7 துப்பு
தன் கொட்டைகளை இழக்க விரும்பாத காவல்தலைவன் காரி, துணை வீரனாக மாரியை அழைத்துக் கொண்டு, புரவியிலேறி துப்பு துலக்க சாணக்கியபுரிக்கு வந்தான்.
வாசலில் நின்றிருந்த யவனர் கூட்டத்தினை பார்த்ததும், அவர்களிடமிருந்தே துப்பு துலக்குதலை ஆரம்பிக்கலாமெண்ணி, மாரியிடம்
டேய், புரவியை பார்த்துக் கொள். நான் போய் யவன வீரர்களிடம் போய் பேசி விட்டு வருகிறேன்.
நானும் வருகிறேனே.
மூடனே, வீரர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்கையில் தூர நின்று கவனி. ஒருநாள் நீயும் என்னிடத்திற்கு வரலாம்.
யவன வீரர்களிடம் சென்ற காரி, ஒரு குறுஞ்சிரிப்பினை முகத்தில் படர விட்டுக் கொண்டான்.
யவன வீரன் காரியை பார்த்ததும், யவன மொழியில்
ஆஹா, என் நீண்ட கொடுந்தனிமை உன்னால் முடிய போகிறது. வா வா
யவன மொழி தெரியாத காரி, புன்னகையை பெரிதாக்கி
இந்த சீலையில் இருக்கும் நபரை பார்த்திருக்கிறாயா?
இவள் பெண் போல இல்லையே? வேறு படங்கள் இருக்கிறதா?
மிக ஆபத்தானவன், ஒரு பெண்ணை பின்னால் தட்டி விட்டான்.
பின்புறம் பெரிதாக இருந்து என்ன பிரயோசனம், இவள் ஆண் போல இருக்கிறாளே
இவன் கிடைத்தால், என் அம்பு இவன் வாயில்தான் பாயும்
அதெல்லாம் சரி, வேறு பெண்கள் இல்லையா?
குதிரையில் இந்த பக்கம் வந்தானா?
யவனன் சோகத்துடன்,
நீ உன்னுடைய சரக்கினை பற்றி உயர்வாக சொன்னாய். என் நீண்ட கால தனிமையை இவள் மூலம் முடிப்பதாக இல்லை. நீ செல்லலாம்.
காரி ஏமாற்றத்துடன் திரும்பினான்.
தலைவரே, ஏதேனும் துப்பு கிடைத்ததா?
அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. வா நகர் புகுவோம். எனக்கு தெரிந்த ஒரு சத்திரத்தில் இரவு தங்கலாம்.
(தொடரக் கூடும்)
குதிரை வீரன் குணா அத்தியாயம் 6 காதலன்
ரணபுஜன் இளவரசி பூங்காவனத்திடம் நாக்கைப் பிடுங்கிற மாதிரி நான்கு கேள்விகள் கேட்டுவிட்டு, சில முத்தங்கள் கொடுத்து போகலாம் என எண்ணிய வண்ணம் அவளின் மாளிகைகுள் நுழைந்தான்.
இளவரசி பூங்காவனம் மாளிகையின் சாளரத்தை பார்த்த வண்ணம் தீவிர சிந்தனையில் இருந்தாள். அந்த புரட்சிக்காரன் செய்தது போல அவளின் புட்டத்தை தட்ட, ரணபுஜன் முன் நகர்கையில் இளவரசி சரெலென்று திரும்பினாள்.
என்ன தீடீரென்று இங்கே விஜயம்?
என் மனைவியாக போகிறவளை ஒருவன் மக்கள் முன்னிலையில் பலாத்காரம் செய்திருக்கிறான். எப்படி நான் பொறுப்பது?
மூடா, அது நீ நினைப்பது போல் இல்லை. அவன் என் காதலன்.
அதிர்ந்து போன ரணபுஜன், சமாளித்துக் கொண்டு
என்ன சொல்கிறாய்?
காதலன் என்று தானே சொன்னேன், திருமணம் உன்னோடுதான். உனக்கே பல உறவுகள் உண்டு என அறிவேன்.
அவன் உன் காதலனா? புரட்சிக்காரன் இல்லையா?
அவன் செய்த புரட்சியெல்லாம் என் ….. சரி அதை விடு, மோகத்தினால் அந்த முட்டாள் அப்படியொரு தவறை இழைத்து விட்டான். அவனை சிறிது காலம் ஆலய தரிசனம் செய்ய சொல்லியிருக்கிறேன்.
அப்படியா? அவன் பெயரென்ன?
குஜாலன்.
அவள் மாளிகையை விட்டு வெளியே வந்த ரணபுஜன், தன் ஒற்றன் ஓ-வை கூப்பிட்டு,
அந்த குஜாலன் உயிருடன் பிடிபட வேண்டும். அவனை வதைச்சாலையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
இளவரசே,இப்படி ஆகி விட்டதே?
ரணபுஜன் விரக்தியுடன்,
விடடா, அவள் கன்னியும் அல்ல, எனக்கு பெரிய சுன்னியும் இல்லை. அரச வாழ்வில் இதையெல்லாம் தாங்கிதான் ஆக வேண்டும்.
(விரக்தி அவனுக்கு மட்டுமா?)
Recent Comments