Posts filed under ‘கோயாவி சாகசம்’
கல்வெட்டு – வரலாற்று குறுங்கதை
குஸ்தியாப்பட்டினத்து பேரரசர் கோயாவியின் அரண்மனை. பேரமைச்சர் பதட்டத்துடன் இருந்தார்.
சோழ நாட்டை தாக்க மன்னர் பிறப்பித்த ஆணையின் பேரில் கோயாவியின் பெரும் படை சென்றிருந்தது. போரின் முடிவு என்ன ஆகியிருக்குமோ என்ற பதட்டத்தில் அமைச்சர் இருந்தார்.
ஒற்றர் படை தலைவன் தேர்க்கோடகன் உள்ளே வந்து அமைச்சரை வணங்கினான்.
என்ன ஆயிற்று? ஒரே வரியில் சொல்.
அமைச்சரே, பெருந்தோல்வி.
என்னடா சொல்கிறாய்
நமது படையிலிருந்து பாதிப்பேர் பிரிந்து காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவினை பார்ப்பதற்காக சென்று விட்டனர். மீதிப் படைகளுடன் சோழ சைன்யத்துடன் போர் தொடுத்தோம். கால்நாழிகை பொழுது கூட போர் நீடிக்க வில்லை.
அங்குள்ள நமது ஒற்றன் சோழ நாடு குஸ்தியாப்பட்டினம் மீது தனது சைன்யத்தை ஏவியிருக்கிறது என தகவல் அனுப்பியிருக்கிறான். படைபலத்தினை இந்த ஒலையில் குறித்துக் கொடுத்திருக்கிறான்.
அப்போது சிரித்த முகத்துடன் வந்த பேரரசர் கோயாவி,
என்ன அமைச்சரே, சோழ நாட்டின் பேரரசனாக என்றைக்கு முடி சூடிக் கொள்ளலாம் என்று நாள் பார்த்து விட்டீர்களா?
மன்னர்பிரான் மோசமான செய்திகளை கேட்டால் எவ்வாறு சொன்னவனை தண்டிப்பார் என அறிந்த அமைச்சர், உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு,
மன்னா, சோழ நாடு நம் மீது சைன்யத்தினை ஏவியிருக்கிறது என ஒற்றரிடமிருந்து ஒலை வந்திருக்கிறது.
நமது எல்லை பாதுகாப்பு படையினரை தயார் படுத்துங்கள். அதற்கிடையில் நமது பெரும்படை புரிந்த சாகசங்களை விளக்கமாக சொல்லுங்கள்.
அமைச்சர் ஒலையினை பிரித்து படிக்க ஆரம்பித்தார்,
டேய், கோடகா, பூஜ்யங்களை இப்படி கவனமில்லாமல் ஒலையிலே இரைத்திருக்கிறான்.
அது சரியான எண்ணிக்கைதான், அமைச்சரே.
அதற்குள் அரசர் கோயாவி,
அமைச்சரே, அடுத்த முழுநிலவிற்குள் பட்டாபிஷேகத்தை நடத்தி விடலாமா?
தளர்ந்த குரலில் அமைச்சர்
மன்னா, சோழ படை 110000 எண்ணிக்கையில் நம் நாட்டை நோக்கி வருகிறது.
நிறைய பூஜ்யங்களை சேர்த்திருக்கிறாய். அதில் ஏதேனும் தவறுக்கு இடமிருக்குமா?
மன்னா, தெறித்து ஒடினால் மட்டுமே நாம் பிழைக்க முடியும், உடனே கிளம்புவோம்.
பெருமூச்செறிந்த கோயாவி,
சோழ நரிகள் இவ்வாறு குயுக்தியில் இறங்குவார்கள் என நான் எதிர்பார்க்க வில்லை. அந்த புரத்தில் உள்ள அரசிகளை உடன் பயணத்திற்கு தயார்படுத்துங்கள்.
ஒற்றன் தேர்க்கோடகன்,
மன்னா, அவர்கள் நாட்டின் எல்லையை தாண்டி நாழிகைகள் பல ஆகின்றன.
அமைச்சர் உண்மையான வருத்தத்துடன்,
நாம் தோற்று விட்டோம், மன்னா,
மெல்லிய புன்னகையுடன் அவரை நோக்கி திரும்பிய மன்னர் கோயாவி,
அமைச்சரே, உடன் நமது ஆஸ்தான சிற்பியை இங்கே வரச் சொல்லுங்கள்.
————————————————————————————————-
கி.பி. 2014-ம் வருடம், சென்னைப் பல்கலைகழகத்தில், வரலாற்று பேராசிரியர் ஷங்கரின் வகுப்பறை.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் அருகே கட்டுமான பணி நடைபெற்ற ஒரு களத்தில் இந்த கல்வெட்டு கிடைக்கப் பெற்றது. இதன்படி, சோழ பேரரசில் ஒரு பெரும் வீரனது சரித்திரம் விளக்கப்பட்டுள்ளது.
மற்ற எந்த சோழர் கால கல்வெட்டுகளிலும் இவனது பெயர் காணப்படவில்லை. சோழப் பெரும் சைன்யத்தை சிறு படை கொண்டு முறியடித்தான் என்றும், சோழ தளபதி பெருவளத்தானை சிறை பிடித்து தனது அரண்மனை பெண்டிருக்கு மேலாடை தைக்கும் பணியில் ஈடுபடுத்தினான் என இந்த பெரும் வீரனின் சாகசங்களை இக்கல்வெட்டு புகழ்ந்து பாடுகிறது.
முடிக்கப்படாத நிரல் (#!@?>
கோயாவி பலூடா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவரது செல் அதிர ஆரம்பித்தது.
****, காலங்காத்தால உயிர எடுக்கிறான்ங்க என சலித்துக் கொண்டார். அப்போது மணி காலை 11.30.
வணக்கம் சார், நான் கோயாவி பேசுறேன்.
ஆபிசுல சீட்ல உன்ன காணலயே. எங்கேய்யா இருக்கே?
ஒரு இன்ஸ்வெடிகேஷன் சம்பந்தமாக….
ஒனக்கு தான் ஒரு மசுரு கேசும் கொடுக்கலையே
சரி, அதுக்கு இன்னாங்கறே என்று சொல்ல நினைத்தாலும்,
சாரி சார், இப்போ வந்துடறேன்.
கோட்டூர்புரத்தில் இருக்கும் இந்திய விஞ்ஞான கழகத்தில் ஒரு மர்டராம். போய் பாரு,
அழைப்பு துண்டிக்கப்பட்டதும், கோயாவி ஆழ்ந்த சிந்தனையில் முழ்கினார். அடுத்தது, சமோசாவா அல்லது பிரன்ஞ் பிரை சாப்பிடலாமா?
கோட்டூர்புரம், விஞ்ஞான கழகம்.
கம்ப்யூட்டர் டெர்மினல் எதிரேயுள்ள நாற்காலியில் பிணம் கிடந்தது. எதிரேயுள்ள கணிணி திரையில்,
#include
void main()
{
Printf(“Hello_
என்ற கணினி நிரல் முடிக்கப்படாமல் இருந்தது.
சிறப்பு ஆய்வாளர் பராங்குசம் பதட்டத்தில் இருந்தார். அவரால் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை. இறந்தவர் கணிணி விஞ்ஞானி பிங்களன் என்றும், அவர் இறப்பதற்கு முன்னர் ஒரு முக்கியமான கணிணி நிரலை எழுத முற்படுகையில் இறந்து விட்டார். உலகையே மாற்றவல்ல முக்கிய கணிணி நிரலாகத்தான் அது இருக்க வேண்டும். நல்லவேளை, இதை துப்புதுலக்க இன்னொரு துப்பறிவாளரை நியமித்துள்ளார்கள்.
வணக்கம் சார், நான் பராங்குசம் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கோயாவியிடம் கை குலுக்கினார். கையெல்லாம் எண்ணெய் பசை பிசுபிசுவென்றது. சுருக்கமாக, கோயாவியிடம் கொலை தொடர்பான விவரங்களை சொன்னார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தை கோயாவி அமைதியாக சுற்றிப் பார்த்தார். பிறகு, துணியை விலக்கி பிணத்தின் முகத்தை பார்த்தார். பிறகு கேட்டார்,
யார் இவர்?
கணிணி விஞ்ஞானி பிங்களன். இன்றைக்கு அவர் பணியில் சேருவதாக இருந்தது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாற்றலாகி வந்திருக்கிறார். பாவம் அல்பாயிசு.
மெள்ள ஜன்னலருகே தன் செழுமிய பின்புறத்தை மற்றவர்களுக்கு காட்டி நின்றுக் கொண்டார். அனைவரும் மூச்சை பிடித்துக் கொண்டு அவர் என்ன சொல்வார் என காத்திருந்தனர். கோயாவி மனதில் ஒன்று, இரண்டு என எண்பத்தி மூன்று வரை எண்ணினார். சடாரென்று திரும்பினார்.
முதலில், இவர் கணிணி விஞ்ஞானி பிங்களனே இல்லை. பிங்களன் என பேர் வைத்துக் கொண்டு, கணிணி விஞ்ஞானி என்றால் சோதிக்க வேண்டாமா?
அதிர்ச்சி அலையலையாய் பராங்குசத்தை தாக்கியது.
பிறகு யார் இவர்? எப்படி கண்டுபிடித்தீர்கள்?
இவன் இந்த கட்டிடத்து வாட்ச்மேன் குமார். ஒரு துப்பறிவாளன் எப்போதும் அனைத்தையும் சொல்வதில்லை.
அனைவரும் பிரமித்தனர், நிம்மதி பரவியது. செத்தது இரவு காவலனாம். அனைவரும் புன்னகைத்தனர். கோயாவியின் துப்பு துலக்கும் திறனை பாராட்டினர். அனைவருடனுடம் கைகுலுக்கி, மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டு, பிஸ்கட், டீ அருந்தி விட்டு கோயாவி கிளம்பினார்.
வாசலில் மெள்ள சிரித்துக் கொண்டார்.
சரசா புருஷனை எனக்கு தெரியாதா என்ன?
துப்பறிவாளன் எப்போதுமே அனைத்தையும் சொல்வதில்லை.
கோப்ரா தீவில் கோயாவி – கடிதங்கள்
இந்த தொடரை எழுதும்போது இவ்வளவு பாராட்டு வரும் என நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நிஜத்திலும் அப்படி பெரிய அளவில் பாராட்டுக்கள் வந்து குவிந்து விடவில்லைதான். இருப்பினும், சில கடிதங்கள் என்னை ஊக்கப்படுத்தின. நிறைய நாடுகளிலிருந்து இந்த தொடரை இரசிகர்கள் படிக்கின்றார்கள். கவுதமாலாவிலிருந்து கூட படிப்பது என் மனதில் கிலியை கிளப்புகிறது.
டாய் பொறுக்கி,
இதெல்லாம் ஒரு பொழப்பாடா? பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்ட்றான், உனக்கெதுக்கு? ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரத்தின் கதையை அப்படியே காப்பியடித்து வேறு மாதிரி எழுதினா தெரியாதுன்னு நினைச்சியா?
வெட்கங்கெட்டவனே, அடுத்து என்னடா? தமிழ்த் திரைப்படம் இயக்க திட்டம் உள்ளதா?
இப்படிக்கு
மோரீஸ் ப்ரம் பாரீஸ்
டியர் மோரீஸ்,
ஏன்ய்யா? விஷ்ணுபுரம் நாவலின் உட் கட்டமைப்பை உள் வாங்கி அதன் வெளி மையங்களை சீர்படுத்தி அதை இந்த தொடரில் கொண்டு வந்திருக்கிறேன். அநேகமாக இதை நான் மட்டுமே செய்திருப்பேன். அதை நியாயமாக நீங்கள் பாராட்டி இருக்க வேண்டும்.
பக்கோடா எதன் குறியீடு என்பதை உணர முடிகிறது. இருப்பினும், கஜ்ஜீரா என்ற உதாரணம் சாலச் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து படியுங்கள். அடிக்கடி எழுதாதீர்கள். அடியோஸ் அமிகோஸ்.
இலங்கையிலிருந்து ஸ்ரீபதி,
அண்ணேன்,
நான் உங்கட பரம இரசிகன். நான் எட்டாம் வகுப்பு வாசித்து வருகிறேன். கோயாவி கதைன்னா எனக்கு அப்படி இஷ்டம். அண்ணேன், உங்கட வலைப்பூவிற்கு காலையிலிருந்து இராத்திரி வரை திரையில் வச்சு இரசித்துக்கிட்டு இருக்கேன்.
அண்ணேன், நீங்க எண்ட தெய்வம். கோயாவிக்கு ஷீலாவை கட்டி வையுங்கோள். கோயாவி ஒரு நல்ல ஏஜெண்டாக்கும். அவருக்கு பெலத்தை கொடுங்கோள்.
தண்டனிட்டு
ஸ்ரீபதி
தம்பி ஸ்ரீ,
கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளதடா. இப்படிதான் இலுமின்னு ஒரு தம்பி இருந்தான். நேரம் சரியில்லாம பய ரௌடியாக போய்ட்டான். யார் எது சொன்னாலும், அதுக்கென்ன இப்போ-ன்னு திரியறான். நல்ல வாசகனாக்கும். ஆனா கண்டதை படிக்கிறான். அது போலவே, நீயும் ஆயுடாதே, கண்ணா.
சின்ன வயசு வாசகர்களும் எனக்கு முக்கியம்தான். குருவி கொத்தி, குதிரை குதிச்சா கொப்பறகேசரியும் குப்புற விழுவான் என்பது ஆன்றோர் மொழி.
நான் பாராட்டுதலையும், விமர்சனத்தையும் சமமாகவே பாவித்து வருகிறேன். இத்தொடருக்கு நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆன்லைன் சாட்டில் வாசகர்களுடன் கதைக்கையில், அவர்கள் எண்ணத்தை அறிய முடிகிறது.
தனிப்பட்ட காரணங்களால், வெளியூர் அன்பர்களின் ஆன்லைன் சாட்டை நான் தவிர்க்க நேரிடுகிறது. இருப்பினும், உங்கள் அன்புதான் என்னை இத்தொடரை எழுத வைத்திருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
ஆன்லைன் சாட் நாள் 15.07.2012 நேரம் மாலை நான்கு மணி
மோரீஸ் | டேய் |
நான் | வணக்கம் மோரீஸ், நலமாக உள்ளீர்களா? |
மோரீஸ் | ஜெயமோகன் ஒரு சூரியன் போல, நீயெல்லாம் கடன் வாங்கிதான் எழுதற. ஒரு சூரியன்தான். தெரிஞ்சிக்கோ. |
நான் | கிட்ட இருப்பது ஒரு சூரியன்தான். அனைத்து நட்சத்திரங்களும் சூரியன்தான் என்பதை மறவாதீர்கள். 😉 |
மோரீஸ் | பெரிய பருப்பு மாதிரி பேசிட்டதாக நினைப்பா? |
நான் | டேய், செருப்பால அடிப்பேன். |
மோரீஸ் | பொறுக்கி ராஸ்கல், உனக்கு தைரியம் இருந்தா அட்ரஸ் சொல்லுடா |
நான் | உங்கக்காக்கிட்ட கேளுடா, புறம்போக்கு. 😉 |
மோரீஸ் | என்னைக்காச்சும் எங்கையில் நீ மாட்டுவடா? |
நான் | ஓ, ரெய்டு போலீசா நீ, ஹஹஹஹஹஹஹஹ |
Happy Weekend!
Recent Comments