புத்தி – பெருங்கதை
July 15, 2014 at 6:19 pm 6 comments
என் அப்பா உயிரையே வைத்திருந்த ரேடியோவை உடைத்தபோதுதான் நான் எப்பேர்ப்பட்ட புத்திசாலி என எனக்கு தெரியவந்தது.
. புத்திசாலி தனத்தை எண்களால் மதிப்பிடுகையில், என்னுடையது சராசரியை விட 70 அதிகமாகவே இருந்தது. சுருக்கமாக சொன்னால், நான் அதிபுத்திசாலி. தண்ணீர் கீழே சிந்தினாலே என்னை வெளுத்துக் கட்டும் என் அப்பா, அவரின் ரேடியோ சிதறினால் என்ன செய்வார்? என் எஞ்சிய வாழ்நாளின் கணங்களை எண்ணிக் கொண்டே அந்த ரேடியோவின் பாகங்களை கோர்த்தேன். ரேடியோவில் வழக்கமாக எழும் அலை சத்தம் இல்லாமல் ரேடியோ பாடுகையில், அவர் மாற்றத்தை உணரவில்லை. நான் உணர்ந்தேன்.
நான் பள்ளியில் படித்த பாடத்திட்டங்கள் வெகு மட்டமானவை. நீண்ட நாட்களாக அவை மாறவேயில்லை. என் ஆசிரியர்களும் அதையே படித்திருந்தமையால், மதிப்பெண்களை பொறுத்தமட்டில் சுமாரான மாணவன் நான்.
அலைஅலையாய் பொறியியலில் மாணவர்கள் சேர்ந்த காலத்தில், நானும் மெக்கானிக்கல் பிரிவினை தேர்ந்தெடுத்து சேர்ந்தேன். நடை, உடை,பேச்சு, பாவனைகளை வைத்து கணித்தால், என்னை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான ஆள் இல்லை. இயந்திரங்களை உருவாக்க, ஒத்துழைக்க செய்வதில் எனக்கு நிகர் அந்த மாநிலத்திலேயே யாரும் இல்லை. இயந்திரங்கள் என்னை புரிந்துக் கொண்டன. என் பேராசிரியர்கள் அதிக மதிப்பெண்கள் எனக்கு கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர்.
இறுதியாண்டு படிக்கையில் வேலைக்கான நேர்க்காணல்களில், ஆரம்பக் கட்டங்களை நான் தாண்டவே இல்லை. ஒரு பன்னாட்டு பொறியியல் குழுமம் சார்பாக நடந்த நேர்க்காணலில் கலந்துக் கொண்டேன். பொறியியல் வட்டாரங்களில் எத்தகைய பெயரையும் அந்நிறுவனம் பெற்றிருக்கவில்லை. நேர்க்காணலுக்கு கொடுக்கப்பட்ட பெயர்களும் குறைவுதான். சென்றவர்களும் சில நிமிடங்களுக்குள் திரும்பினர்.
என் முறை வந்தது. உள்ளே ஒரு வெள்ளையர் வியர்வை ஊறிய நீலச் சட்டையுடன் சலிப்பான பார்வையுடன் அமர்ந்திருந்தார். அமரச் சொன்னார். என் மதிப்பெண் சான்றுகளை பார்த்த அவர்,
மதிப்பெண்கள் அதிகம் நீ பெற்றிருக்கவில்லை. இல்லையா?
இந்த பாடத் திட்டத்தினை படித்த வரை நான் பெற்றது இதுவே அதிகம் என நினைக்கிறேன்.
அவர் உதட்டில் மெல்லிய புன்னகை வந்தது.
ஆக, நீ வெளிநாட்டில்,உதாரணமாக, கால்டெக் போன்ற பல்கலைக் கழகத்தில் படித்திருந்தால் நல்ல மதிப்பெண்களை பெற்றிருப்பாய், இல்லையா?
அங்குமே இதே மதிப்பெண்கள்தான் பெற்றிருப்பேன்.
ஆர்வமூட்டுகிறாய். இரண்டு பாடத்திட்டங்களும் ஒன்று என்கிறாயா?
இரண்டுமே தவறான அணுகுமுறை என்கிறேன்.
எவ்வாறு?
இயந்திரம் என்றில்லை, எந்தப் பாடத்திட்டங்களிலும் உள் உணர்வை மையமாக வைத்து எழுதப்படுவதில்லை. மாணவனின் உள்உணர்வை வெளிக் கொண்டுவருவதில் எத்தகைய உத்வேகமும் பாட நிறுவனங்கள் காட்டுவதில்லை.
ஆனால், அமெரிக்காவில் ….
சிலர் அப்பாடத்திட்டங்களை மீறி தனித்துவம் நிறுவியவர்கள் என ஒத்துக் கொள்கிறேன். எஞ்சியவர்கள்?
இயந்திரங்களை பொறுத்த மட்டில்….
நிறைய மைல்கல்களை கடந்திருக்கிறீர்கள். உண்மைதான். ஆனால் தவறான பாதையில்
இப்போது அவர் கண்களில் தெரிந்தது வேறொன்று. தான் டியட்ஸர் என அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு எவ்வளவு நேரம் நேர்க்காணல் நடைபெற்றது என நினைவில்லை. இரு சக அறிவுகள் அளவளாவும்போது நேரம் பொருட்டே இல்லை.
நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
டியட்ஸரும் நானும் ஒருமிய மனநிலையில் இருக்கிறோம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.
புதிய தூரங்களை கடப்பதில் இருவரும் நேரேதிர் கொள்கைகளை கொண்டிருந்தோம் என்பது பிறகே எனக்கு புரிந்தது. வெகு தாமதமாக.
– தமிழில் நெடுங்கதை எழுத வேண்டுமென்ற ஆசையில் எழுத ஆரம்பித்த கிகில் கதை. இரவு நேரத்தில் படிக்காதீர்கள் என்ற எச்சரிக்கையுடன். இதன் அடுத்த பகுதிகளை கூடிய விரைவில் படிக்கலாம்.
Entry filed under: கதை.
1.
கிங் விஸ்வா | July 16, 2014 at 8:26 am
எவ்வளவு தாமதமாக புரிந்தது?
2.
sharehunter | July 16, 2014 at 8:28 am
Soon. I get the inspiration for the story from Doomcrest series. I always wanted to write one along with it.
3.
Rafiq Raja | July 16, 2014 at 12:41 pm
திகில் கதைக்கு உண்டான எதுவும் இதில் இல்லையே…. இனி வரும் பாகங்கள் தெளிவுபடுத்துமா ? 🙂
4.
sharehunter | July 16, 2014 at 12:57 pm
I hope so. Haven’t written any so far. 😉
5.
சாரு shankar | July 17, 2014 at 5:17 pm
எல்லாம் ட்ரான்ஸ்பார்மர்ஸ் கடாட்சம் வேற என்னத்த சொல்ல …. :p
6.
sharehunter | July 17, 2014 at 5:18 pm
😉