எங்கே காஞ்சனா?
May 5, 2013 at 1:50 pm 9 comments
கோயாவி ஒய்வாக அமர்ந்திருக்கையில் அவரது அறை கதவு தட்டப்பட்டது. வெளியே 40 வயது மதிக்கதக்க ஒரு நபர் நின்றிருந்தார். மனிதனுக்கு நாற்பது வயதிற்கு மேல் நாய்க்குணம் என்ற வரி கோயாவியின் மனதில் ஒடியது.
சீக்ரெட் ஏஜெண்ட் கோயாவி வீடு இதுதானே?
இருக்கலாம். நீங்க யாரு?
அத அவருக்கிட்டதான் சொல்ல முடியும். நீங்கதானே அவரு?
நீங்க யாருன்னு தெரியாம அத உங்ககிட்ட சொல்ல முடியாது.
இருவரும் கனத்த மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர்.
பாகிஸ்தான் வெப்சைட்ல உங்க போட்டோவ பாத்திருக்கேன்.
கோயாவியின் தலையில் ஆபத்து எனும் சிகப்பு விளக்கு மினுக்க ஆரம்பித்தது.
நீயும் ஸ்பையா?
இல்ல, நான் காஞ்சனா புருஷன்
இப்போது சிகப்பு லைட் பிரகாசமாக எரிய ஆரம்பித்திருந்தது. காஞ்சனா, கோயாவியின் நண்பிகளில் ஒருவர். முன்னாள். துயரம் தரும் பிரிவு. வேலு மிலிட்டரி ஒட்டலின் வாசலில் வைத்து, விறகு கட்டையால் அடித்து, கைப்பையில் இருந்து கத்தியை எடுப்பதற்குள், கோயாவி அவளுடன் ப்ரேக் அப் செய்து விட்டார். ஒற்றர்களில் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.
உள்ள வா.
உள்ளே பாயில் வசதியாக அமர்ந்தனர். மீண்டும் கனத்த மௌனம் நிலவியது. கோயாவி படித்துக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரையின் நாவல் குப்புற கிடந்தது.
விஷயத்திற்கு வா
என் சம்சாரம் மேல எனக்கு சந்தேகம் வந்துருக்கு.எனக்கு தெரியாம அவ வேற யாரையோ காதலிக்கிறாளோன்னு சந்தேகம்.
எங்கிட்ட ஏன் வந்தே?
அத கண்டுபிடிக்கணும். என்னால இப்ப தூங்க முடியல, சரியா சாப்பிட முடியல. ஒரே மென்டல் டார்ச்சர இருக்கு. ப்ளீஸ் எனக்கு உதவி செய்யுங்க.
இங்க பாரப்பா. குடும்பம்னு இருந்தா இந்த மாதிரி ஏதாச்சும் இருக்கதான் செய்யும். ஆனா உன் பொண்டாட்டி நேச்சருக்கு, நீ இன்னும் உயிரோட இருக்கேன்னே காதல் எங்காவது இருக்கதான் செய்யும்.
வந்தவனின் தலை மெள்ள மெள்ள அசைய ஆரம்பித்து, வேகமாக ஆட ஆரம்பித்தது. கண்கள் பிரகாசமாயின. தழுதழுத்த குரலில்,
என்னை மன்னித்து விடுங்கள். எவ்வளவு பெரிய விஷயத்தை ஈசியாக சொல்லி விட்டீர்கள். நான் இங்கு வந்தே இருக்கக்கூடாது. தயவு செய்து, இதை வெளியில் சொல்லாதீர்கள்.
சரி.
வந்தவன் போன பின், கோயாவி ஆழ்ந்த பெருமூச்செறிந்தார். சந்தேக கணவன். ம்ம்ம்ம். மெல்லிய தலைவலி ஆரம்பித்தது.
காஞ்சனா, ஒரு காப்பி கொடும்மா.
Entry filed under: Hunter's Mind.
1.
திண்டுக்கல் தனபாலன் | May 5, 2013 at 2:17 pm
ஓஹோ…
காதல் இங்கு தான் இருக்கா…! காஃபி வேறு..!
2.
shankar | May 5, 2013 at 2:27 pm
ஒரு கணவனின் கண்ணீரை அதன் ஈரத்துடனும், மென்சூட்டுடனும், அதனுள் கால் கழுவிடா காளைபோல் கிட்டிக் கிழிக்கும் வழியுடனும் எழுத உங்களை விட்டால் யாரால் முடியும். காஞ்சனாவை கேட்டதாக சொல்லவும் 😛
3.
shankar | May 5, 2013 at 6:05 pm
ஓ மை காட், அடக் கடவுளே இப்போதுதான் ஓவியத்தின் அர்த்தம் உறைத்தது…. வாட் எ டேலன்ட், ஐ மீன் என்ன ஒரு திறமை ஃபெண்டாஸ்டிக் 😛
4.
illuminati | May 6, 2013 at 12:23 am
காதல்ன்னா என்னன்னு இப்ப தான் அங்கிள் புரிஞ்சது. இனி உங்கள் கொள்கையை கடைப்பிடித்து, உங்களின் வழிமுறைகளை பின்பற்றி, உங்களைப் போலவே சிறப்பான இல்லறம் அடைய எல்லோரையும் தூண்டுகிறேன். 😛
5.
illuminati | May 6, 2013 at 12:24 am
தாங்கள் ஆர்ட்வொர்க் சகிதம் கலக்கும் பொழுதே தெரிகிறது தங்கள் வொர்க் எவ்வளவு அருமையாக இருக்கும் என்பது. 🙂
6.
illuminati | May 6, 2013 at 12:29 am
ஏன் பாஸு, உங்களுக்கு டிகாஷன் பிடிக்குமா இல்ல இன்ஸ்டன்ட் காப்பி பிடிக்குமான்னு கேக்க சொல்லி பிரான்ஸ்சில் இருந்து ஒரு குரல் கேக்குது.
7.
ரஃபிக் ராஜா | May 8, 2013 at 5:51 pm
அந்த படம் ஒரு ஹைக்கூ கவிதை… அவன் மானஸ்தன்யா….. காஞ்சனாவுடன் நீடுழி வாழ்க 😛
8.
sharehunter | May 8, 2013 at 6:41 pm
இந்த படத்தை முதலில் ஆயில் பெயின்டிங்-ல் வரையலாம் என்றிருந்தேன். படத்தின் ஆன்மா மற்றும் என் மேசையையும் ஆயில் கெடுத்து விடும் என்பதால், கருப்பு வெள்ளையில் வரைந்திருக்கிறேன்.
9.
ரஃபிக் ராஜா | May 15, 2013 at 3:41 pm
சும்மா தேங்கா ஆயில் தேச்ச மண்டைய வச்சு, பூசி மொழுகிறுந்தா நல்லா இருந்திருக்கும்… இல்லன்னா நம்ம பஜ்ஜி கடை பேப்பர் ஆயில் கூட போதிருக்குமில்லையா ?