Posts filed under 'கதை'
மே 15, 2015
பெங்களுரு.மே மாதம் 15-ம் நாள், 2015.
ரத்னா டவர்ஸ் ஐந்து நட்சத்திர ஒட்டலில் கன்னா முகம் வெளிறி போயிருந்தான். அவனுடைய மேலதிகாரி தொந்தி அதிர கத்திக் கொண்டிருந்தார்.
” அவனுக்கு தான் அறிவில்ல. உனக்கு எங்கே போச்சு புத்தி? ஒரு ஏற்பாடு சரியா பண்ண மாட்டிங்களா? வெட்டி சம்பளம் தான்யா வாங்கறீங்க. ஷர்மா எங்கே? இருக்கானா வீட்டுக்கு போய்ட்டனா?”
“சார், ஷர்மா எப்படியாவது வாங்கிட்டு வந்துர்றான்னு சொல்லிருக்கான்.”
“கிழிச்சான். உங்களை கட்டிக்கிட்டு நான் மாரடிக்கிறன். எப்படிய்யா அரேன்ச் செய்வான்?”
“அவனுக்கு தெரிந்த மதறாசி ஒருத்தன் ஜலகல்லி-ல இருக்கானாம். அவங்க வீட்டுல சொல்லி …”
“ஒழுங்கா வந்து சேருல்ல அவனுக்கு மெமோ தான் சொல்லு. சமோசா எல்லாம் ரெடி ஆயிச்சா?”
” இன்னும் ஒரு மணி நேரத்தில வந்திரும் சார்.”
“யோவ், மினிஸ்ட்டரே இன்னும் அரை மணி நேரத்தில வந்துருவார். சென்னையிலேயிருந்து கிளம்பி வந்துட்டே இருக்காராம். பேனர் என்ன ஆச்சி? அது நாளைக்கு வந்துருமா?”
” இல்லை சார். இதோ இங்கே வைச்சுருக்கேன்.”
“சரியான இடம்யா. அப்டியே சுருட்டி வைச்சுரு. யாரும் பார்க்கக் கூடாது”
“சார்….”
“பேனர் எதுக்கய்யா? பிரி, பார்ப்போம். யோவ், என்னய்யா வார்மிங்க்கு பதிலா வார்னிங் போட்ருக்கு”
“சார், அது எம் தான் சார்”
“மினிஸ்டர் கேட்டா சொல்றியா?”
“…”
“மினிஸ்டர் பேர விட இந்தாளு பேரு பெருசா இருக்கு. இதுவும் ஷர்மா வேலைதானா?”
” இல்லை.. சார்… வந்து ….”
”சார், மினிஸ்டர் வர லேட்டாகும்.”
“ஏன்யா ..”
“சென்னையிலே பனிப்புயலாம். ப்ளைட்டெல்லாம் லேட்டாம்.”
“கடவுளே, இப்பதான்யா உயிரே வந்திச்சி”.
10 comments July 3, 2008