Ponyo on the Cliff by the Sea
May 8, 2009
மியகஷியின் மற்றொரு அற்புதம். இந்த வருடத்தில் வெளிவந்த சித்திரத் திரைப்படம். இவரின் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் மியகஷி இரசிகர் மன்ற தலைவர் ஆக ஆக்கிவிட்டார்கள். நானும் ஏதேனும் குற்றங்குறைகளை கண்டுபிடிக்கலாம் என்றுதான் பார்க்கிறேன்.
ஒவ்வொரு நாட்டிலும் கடல் பற்றிய புனைவுகள் உண்டு. கடல் சார்ந்து வாழ்க்கின்றவர்களின் புனைவுகள் சிறிது மாயத்தன்மை கலந்தவையாகவே பெரும்பாலும் இருக்கும். அவற்றிலிருந்து உருவாக்கப்பட்டது தான் இத்திரைப்படத்தின் கதை.
கடலின் ஆழத்தில் உள்ள ஒரு மந்திர நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஒரு மந்திர சக்தி வாய்ந்த, மனித முகம் கொண்ட ஒரு தங்க மீன் வெளியுலகை (நம் உலகம் மாசுலகம் என்று படத்தில் அழைக்கப்படுகிறது) பார்க்க தன் தந்தையை மீறி கிளம்புகிறது.

சஸ்கே
கடலுக்கு அருகே உள்ள ஒரு சிறு குன்றின் உச்சியில் வசிக்கும் சஸ்கே என்னும் சிறுவனின் நட்பு அவளுக்கு அங்கே கிடைக்கிறது. அவன் அவளை பொன்யோ என பெயரிட்டு ஒரு வாளியில் வைத்து நட்பு பாராட்டுகிறான்.

பொன்யோ - தங்க மீன்
இதற்கிடையில் அவளின் தந்தை பொன்யோவை தேடிக்கொண்டு வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். அவளை பிரிந்து துயரமடைகிறான் சஸ்கே.
ஆழ்கடலில் பொன்யோவிற்கும் அவள் தந்தைக்கும் கடும் வாக்குவாதம் நடக்கிறது. அவள் மீண்டும் மேலே செல்ல விரும்புகிறாள். அவள் தந்தையோ மனிதர்கள் நம்ப தகுந்தவர்கள் இல்லை என்கிறார். சொன்ன பேச்சை கேட்காத பொன்யோவை உறைய வைத்து விட்டு தந்தை வெளியேறுகிறார்.

பொன்யோவின் நைனா
சஸ்கே மீது கொண்டிருந்த நட்பு அவளை அந்த உறைநிலையிலிருந்து விடுவித்து தன் சகோதரர்களின் துணையோடு கடடலைகள் பொங்க, மனித உருவம் கொண்டு அவனை நோக்கி செல்கிறாள் பொன்யோ. மலை உச்சியை நோக்கி காரில் சஸ்கே செல்ல, அதற்கு இணையாக கடடலைகள் மேலேறி மீன்களின் மேலேறி அவனை நோக்கி பொன்யோ ஒடும் காட்சி மிக அற்புதமானது.
அவனை நோக்கி ஒடிவந்து தான் பொன்யோ என அறிமுகப்படுத்திக் கொள்ளும் குழந்தைத் தனமும் அதன் பிறகு அவனின் வீட்டில் அவள் அடிக்கும் கும்மாளங்கள் எல்லாமே குழந்தை மனதை மிகவும் படித்திருக்கின்ற ஒரு இயக்குநரின் மிகச் சிறந்த திரைக்கதையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
அவள் மனித உருவம் எடுத்திருப்பதால் இயற்கை சமநிலை குலைந்து விடுவதால் கடல் சீற்றமடைந்து அருகிலுள்ள நிலப்பகுதிகளை மூழ்கடித்து விடுகிறது. இது சீர்ப்பட வேண்டுமானால் பொன்யோ மீண்டும் தங்க மீனாக வேண்டும். தன் நண்பனை இழக்க வேண்டும். அவள் தன் நண்பனை இழந்தாளா? என்பதுதான் கதை.
இந்த படத்தின் முடிவுக் காட்சிகள் திருப்திக் கரமாக இல்லையென என் நண்பர் ஒருவர் சொன்னார். உண்மைத்தான். இவரின் அனைத்துப் படங்களிலும் முடிவு காட்சிகளை பார்க்கும் பொழுது அப்படிதான் நானும் உணர்ந்திருக்கிறேன். காரணம் என்னவென்று யோசித்துப் பார்க்கும்போது நம் மனதிற்கு பிடித்த ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் போது அவை தீடிரென முடியும் போது பிடிக்குமா என்ன?
Entry Filed under: திரை விமர்சனம். .
6 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
shankar visvalingam | May 8, 2009 at 9:28 pm
நண்பரே, ஆரம்பக் காட்சியில், தகப்பனின் வினோத நீர்மூழ்கியில் இருந்து தப்பி, ஜெலி மீன் ஒன்றின் மீது படுத்துக் கொண்டு இன்னொரு ஜெலி மீனை போர்வையாக போட்டுக் கொண்டு கடலின் ஆழத்திலிருந்து பொன்யோ மேலேறும் காட்சியும், அதனுடன் இணையும் அந்த ஒபேரா பாடலும், மயக்க வைக்கும்.
சிறு வாளியில் இருந்து பொன்யோ காட்டும் குறும்புகள் மனதினை கிச்சு கிச்சு மூட்டுவன.
பன்றி வத்தல் தான் உணவாக வேண்டும் என தன் தகப்பனிடம் அடம்பிடிக்கும் காட்சி, சிறிய படகொன்றில் பொன்யோ தூங்கி வழியும் காட்சி, பாலை எடுத்து சிறு குழந்தைக்கு தரும் காட்சி என மனதை தொடும் காட்சிகள் ஏராளம்.
இறுதிக் காட்சிகளை, சஷ்கே பொன்யோவை ஏற்றுக் கொள்வது போல் ஏற்றுக் கொள்வோம். என் நண்பர் ஒருவர் சொன்னார் மியஷகியின் படைப்பை நாங்கள் விமர்சிக்க கூடுமோ என்று. அதில் நியாயம் இருக்கிறது.
2.
யாத்ரீகன் | May 8, 2009 at 9:39 pm
2 days back only i saw Kiriki’s Delivery Service.. and was planning to watch Grave of the Fireflies this weekend.. thanx for introducing the next movie to be planned
3.
ЯR [comicology] | May 8, 2009 at 10:52 pm
ஏற்கனவே நீங்கள் பரிந்துரைத்த படங்கள் இரண்டு பார்க்க இன்னும் நேரம் கிட்டவில்லை, அதற்குள் அந்த வரிசையில் இன்னொன்றையும் சேர்த்து விட்டீர்களா….? சரி எல்லாத்தையும் மொத்தமா பார்த்துட வேண்டியதுதான்… அதுதான் தேர்தல் விடுமுறை வருதே…..
// நம் மனதிற்கு பிடித்த ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் போது அவை தீடிரென முடியும் போது பிடிக்குமா என்ன? //
அருமையான விளக்கம். மியகஷி கூட அவரின் முடிவுகளுக்கு இப்படி காரணம் காட்டி இருக்க முடியாது
பி.கு.: நண்பர் ஷங்கரின் வலைப்பூ சுட்டியை சரியாக அமையுங்கள் பங்கு வேட்டையரே….
ÇómícólógÝ
4.
கர்லா புருணீ | May 9, 2009 at 3:44 pm
அன்பு அண்ணா,
விமர்சனம் நன்றாக உள்ளது, இப்படத்தினை நான் வயக்கரா தாத்தாவுடன் பார்த்தேன். அவர் அருகில் இருந்ததால் படத்தினை பார்க்க முடியவில்லை. என் தம்பி ரஸகுல்லா ரஃபிக்கிடம் என் அன்பைத் தெரிவிக்கவும்.
5.
ЯR [comicology] | May 10, 2009 at 12:59 pm
கர்லா அம்மையே, இங்கேயும் நம் சகோதர பாசத்தை வெட்ட வெளிச்சமாக்க வேண்டுமா…. பார்க்கும் பெண்கள் எல்லாம் என்னை உடன் பிறவா சகோதரனாக பார்த்து விட போகிறார்கள்….
ஒரு பேச்சுலரின் பாவம் உம்மை சும்மா விடாது, சொல்லிட்டேன்….
தாத்தா, மண்ணுக்குள்ளே போயும் ஒரு ரவுசு தாங்க முடியலப்பா….. ##$$@@###@@
6.
Surya | June 25, 2009 at 1:09 pm
அடடா. சில பொக்கிஷங்கள் கண்ணுக்கு தெரியாது என்பது உண்மையே..உங்க வலையும் இத்தனை நாள் தெரியாமல் போனது.
கிங் விஸ்வாவிற்கு நன்றிகள் பல…
கலக்கல்.