27-04-2009
April 27, 2009
இம்மாதம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ளன. நமது சந்தையோ 3300 என்ற நிலையில் மிகவும் வலுவாக உள்ளது. நடுவில் ஏற்பட்ட தள்ளாட்டங்களும் அதை மையப்படுத்தியே அமைந்துள்ளன. இது சிறிய முதலீட்டாளர்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை வரவழைக்கும் செயலாகவே நான் பார்க்கிறேன்.
எது நடந்தாலும் 3300 என்ற நிலை மிகவும் வலுவானது அதனை தாண்டி சந்தை போகாது என உறுதியாக நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். சந்தையின் அச்சாணிகளாக இருக்கும் குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. ஆனால் ஊடகத்தில் அதைப் பற்றிய பெரிய அளவில் அலசல்கள் இல்லை. உதாரணமாக, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி போன்றவை.
தற்போது ஆசிய சந்தைகள் சற்று பலமிழந்து காணப்படுகின்றன. நமது சந்தை ஆரம்பத்தில் உயர்ந்து பின்னர் செல்லிங் பிரஷர் காரணமாக மெள்ள மெள்ள இறங்கவும் வாய்ப்பு உண்டு. சில சிறிய துறைகள் ஏற்றம் காண வாய்ப்புண்டு. அவற்றில் ஷார்ட் கவரிங் நடப்பதால்.
சந்தையின் உண்மையான நிலை தற்சமயம் 2800 என்ற நிலையில் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. அதையும் தாண்டி இறங்கினால் சந்தை வெகுவாக இறங்க வாய்ப்பும் உண்டு. நீண்ட கால முதலீட்டாளர்கள் சற்று பொறுப்பது நல்லது என தோன்றுகிறது.
தேர்தல் காலத்தில் சந்தை இறங்கும் வாடிக்கையும் தற்போது மாறியிருக்கிறது. வட நாட்டில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலும் சந்தையை பெரிய அளவில் பாதிக்கவில்லை. இந்த இயல்பிற்கு மீறிய செயல் பின்னர் சந்தையை பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன்.
தற்போதைய சூழலில் காத்திருத்தலே நல்லது.
Read Disclaimer.
Good Morning to you all!
Entry Filed under: Market Analysis. .
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Anonymous | April 27, 2009 at 9:40 am
THANK YOU.
2.
Nandhan | April 29, 2009 at 7:14 am
தலைவரே…..எங்க போனிங்க….உங்க பதிவுகள் இல்லாம மார்க்கெட் நாள் காலை எதோ மிஸ் ஆனமாதிரி இருக்கு…