29-01-2009
January 29, 2009
வெகு உற்சாகமான அமெரிக்க சந்தை. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் அப்படியே. கடந்த இரண்டு நாட்களாக நமது சந்தையும் ஏற்றம் கண்டுள்ள நிலையில், இன்றும் அது தொடரும் என எதிர்பார்க்கலாமா?
இன்றைக்கு F & O முடியும் தினம் என்பதால், சந்தை ஊசலாட்டத்தில் காணப்படும். அமெரிக்க சந்தை உயர்வு, பெட்ரோல் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு போன்றவற்றால் சந்தை நண்பகல் வரை மேலேறியே காணப்படும். இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது நண்பகலுக்கு பின்னால்தான் தெரியும். ஐம்பது புள்ளிகளை நண்பகலுக்கு பின்னால் இழக்க வாய்ப்புள்ளது என கருதுகிறேன்.
சத்யதிற்கு இன்று தான் F & O கடைசி நாள். இன்றும் சிறிது மேலேற முற்படும். இப்போதைக்கு அக்குழுமத்தை வாங்குவது ரிஸ்க்தான். ஏனென்றால் சந்தை இறங்கும்போது முதலில் கரடிகள் தாக்குவது தகவல் தொழில்நுட்ப துறையைதான். அந்த நேரத்தில் இந்த குழுமமானது மிக கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகும்.
எதிர்பார்த்த அளவில் வங்கித் துறை பங்குகள் இன்னும் மேலேற வில்லை. இன்றாவது அதை எதிர்பார்க்கிறேன்.
சந்தையானது 115 முதல் 28 வரை ஆடும். முடிவு 45 முதல் 68 வரை முடிய வாய்ப்பு உண்டு.
Good Morning to you all!
Entry Filed under: Market Analysis. .
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Rajkumar | January 29, 2009 at 3:56 pm
Thank you .Good analaysis
2.
V.SURESH, SALEM | January 29, 2009 at 7:16 pm
give sector analysis/intraday techniques to make this blog more interesting.
A new look may be provided to view the blog more attractive.