மாபெரும் ஹைக்கூ போட்டி

October 29, 2008 at 6:21 pm 42 comments

      சந்தை இறங்கி வருகின்ற நிலையில், முதலிட்டாளர்களில் பலர் கவிஞர்களாக ஆகி வருகின்றார்கள்.   அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த மாபெரும் ஹைக்கூ போட்டி நடத்தப்படுகிறது.

      ஒவ்வொருவர் மனதிலும் கவிதை உண்டு என பிரபல கவிஞர் ஜெ. அலெக்ஸாண்டர் டைம்ஸ் இதழுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளதை நினைவு கூருங்கள். உங்கள் மனதில் பொங்கி, ததும்பி, அலைந்து கொண்டிருக்கும் அதனை பில்டர் செய்து மூன்று வரிகளில் இங்கே பின்னுாட்டமாக இட வேண்டியதுதான்.

      வெற்றி பெறும் ஹைக்கூவை எழுதியவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கூட பரிசு கொடுக்கலாம்தான். அதனை சந்தையில் முதலீடு செய்தால் தற்போது ஒன்றும் தேறாது என்ற நிலையில் வெற்றி பெற்றவர்களை வேறு வகையில் பாராட்டலாம் என முடிவு செய்திருக்கிறேன்.  உங்களுக்கு மறக்க முடியாத நினைவு பரிசாக வருங்கால அமெரிக்க துணை ஜனாதிபதி திருமதி சாரா பாலின் சென்னை வந்தால், அவருடன் முனியாண்டி விலாஸில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும்.  இதற்கு நண்பர் கிங் விஸ்வா உதவுகிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார். எதற்கும் அவரின் புகைப்படத்தினை இங்கே பிரசுரிக்கிறேன்.

அன்னை சாரா பாலின்

அன்னை சாரா பாலின்

       இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறும் ஹைக்கூகளை தேர்ந்தெடுக்க கற்றறிந்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.  அதில் நானும், நண்பர் விஸ்வா (அவர் விரும்பினால். ஹைக்கூவில் நல்ல பரிச்சயம் அவருக்கு உண்டு. ஹைக்கூக்கு மொத்தம் மூன்று வரிகள்தான் என அவர் எழுதிய பின்னுாட்டத்தினை யாரும் மறந்திருக்க முடியாது). 

      பிரசுரம் ஆகும் எல்லா ஹைக்கூகளை எழுதியவர்களும் கவிஞர் என அழைக்கப்படுவார்கள்.  உங்கள் கற்பனை ஊற்றை திறந்து முத்தான மூன்று வரிகளில் வரலாறு படைக்க படை திரண்டு வாரீர்! வாரீர்!!

Entry filed under: Hunter's Mind.

29-10-2008 31-10-2008

42 Comments Add your own

  • 1. Karthikeyan G  |  October 29, 2008 at 7:09 pm

    Josh..

    எனக்கு ஓர் ஐயம். நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்

    //ஹைக்கூக்கு மொத்தம் மூன்று வரிகள்தான் //

    பழனி கோவிலில் நான் சாமி கும்பிட்ட பிறகு பட்டை போட்டு விட்டார்கள். அதுவும் மூன்று வரி தான் இருந்தது. அதற்கும் ஹைக்குவிற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?

    **************************************************

  • 2. Karthikeyan G  |  October 29, 2008 at 7:11 pm

    Josh..

    எனக்கு ஓர் ஐயம். நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்

    //ஹைக்கூக்கு மொத்தம் மூன்று வரிகள்தான் //

    பழனி கோவிலில் நான் சாமி கும்பிட்ட பிறகு பட்டை போட்டு விட்டார்கள். அதுவும் மூன்று வரி தான் இருந்தது. அதற்கும் ஹைக்குவிற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?

  • 3. sharehunter  |  October 29, 2008 at 7:14 pm

    மேற்கண்ட உங்களின் பின்னுாட்டம் ஐந்து வரிகளில் இருப்பதால் ஹைக்கூ அல்ல என தீர்மானிக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறது.

    நடுவர் குழு

  • 4. Karthikeyan G  |  October 29, 2008 at 7:17 pm

    அறம் செய்ய விரும்பு
    ஆறுவது சினம்
    இலையில் சோறு போடு.

  • 5. dg  |  October 29, 2008 at 7:59 pm

    katka
    katra pinbu nirka
    piraku duunkuka

  • 6. sharehunter  |  October 29, 2008 at 8:04 pm

    கார்த்தி,
    முதல் ஹைகூ இப்படி இருக்க வேண்டும.

    அறம்
    செய்ய
    விரும்பு
    இரண்டாவது கவிதை நிராகரிக்கப்படுகிறது.
    மூன்றாவது ஒரளவு தேறுகிறது,
    இது வேலைக்காவது, கார்த்தி, சாராவை நீங்கள் மறந்து விட வேண்டியதுதான்.

    ஸாரி, டிஜி, ஹைகூ தமிழில் எழுத வேண்டும்.

  • 7. dg  |  October 29, 2008 at 8:32 pm

    விள‌க்கேற்ற‌ வ‌ந்த‌ ம‌ரும‌க‌ள்
    வீட்டிற்கே வெளிச்ச‌ம் த‌ந்தாள்…

    தீக்குளித்து.

    சார் தமிழில் எழுதியாச்சு

    (பின் குறிப்பு : நான் எழுதியது அல்ல:
    எங்கோ படித்தது)

  • 8. paranee  |  October 30, 2008 at 2:00 am

    நீ
    நான்
    தமிழர்கள்

  • 9. Rajkumar  |  October 30, 2008 at 8:01 am

    கண்ணீர்த்துளி

    இனிக்கிறது

    கிளிசரின்

  • 10. nagu  |  October 30, 2008 at 11:18 am

    நானும் அவளும் காதலித்தோம்,
    இன்று – அவளுக்கு மட்டும்
    தலை தீபாவளி

    (எங்கோ, எப்பொழுதோ படித்ததாக நினைவு…….)

  • 11. dg  |  October 30, 2008 at 11:55 am

    நானும் அவளும் காதலித்தோம்,
    இன்று – அவளுக்கு மட்டும்
    தலை தீபாவளி good

  • 12. dgdg12  |  October 30, 2008 at 11:57 am

    good

  • 13. dgdg12  |  October 30, 2008 at 12:03 pm

    good good

  • 14. maharaja  |  October 30, 2008 at 12:21 pm

    கடவுளின்
    கடவுள்
    கோத்ரேஜ் பூட்டு !

  • 15. kalyankumar  |  October 30, 2008 at 1:00 pm

    எஸ்தரைக் காதலித்தேன்
    கன்னிகாஸ்திரியாய் அவள்
    சிலுவையில் நான்!

  • 16. sriram  |  October 30, 2008 at 2:57 pm

    நம்பினோர்
    கைவிடபடுவர்
    நிபிடியை

  • 17. dgdg12  |  October 30, 2008 at 3:39 pm

    yes sriram sir

  • 18. Karthikeyan G  |  October 30, 2008 at 4:15 pm

    நேற்று :-))
    இன்று :-((
    நாளை :-??

  • 19. Karthikeyan G  |  October 30, 2008 at 4:16 pm

    நேற்று 🙂
    இன்று 😦
    நாளை 😕

  • 20. dgdg12  |  October 30, 2008 at 5:36 pm

    நேற்று
    இன்று
    நாளை
    sir idu eanna sir

  • 21. Karthikeyan G  |  October 30, 2008 at 5:57 pm

    சார், இது Structural modernisam வகை கவிதை சார். இதை படித்து விட்டு அறையின் மூலையில் குத்த வைத்து உட்கார்ந்து யோசித்தால் இந்த கவிதை பல வகை பொருள் தரும்.

  • 22. டுமீல்ஜி  |  October 30, 2008 at 6:29 pm

    வெங்காயம்
    சென்செக்ஸ்
    கண்ணீர்

    —-இரண்டும் முடிவில் ஒன்றும் இல்லை.
    —-கடைசியில் கண்ணீர்.

  • 23. sharehunter  |  October 30, 2008 at 6:29 pm

    ஹைகூவை தவிர மற்றதெல்லாம் எழுதுறீங்க, மக்களே! சாம்பிளுக்கு நான் ஒன்னு எழுதுறேன்.

    வராது
    எனக்கு
    ஹைக்கூ!

    🙂

  • 24. sharehunter  |  October 30, 2008 at 6:30 pm

    சந்தை பற்றி இன்னொரு ஹைக்கூ

    6500
    1800
    அய்யோ!
    😦

  • 25. basheer  |  October 30, 2008 at 6:46 pm

    ஆசை
    பயம்
    நிப்டி!

  • 26. டுமீல்ஜி  |  October 30, 2008 at 6:47 pm

    21500ஆஹா
    7500ஐயோ
    4500????

  • 27. basheer  |  October 30, 2008 at 7:05 pm

    கவிதை
    தேய்ந்து
    ஹைக்கூவானது…

  • 28. Karthikeyan G  |  October 30, 2008 at 8:04 pm

    சார் ஹைக்கூ எனக்கு வரவில்லை.
    அடுத்த முறை British பொருளாதாரத்தின் உந்து சக்தியாய் விளங்கும் Britney Spears-ஐ சந்திக்க ஒரு ‘நேரிசை வெண்பா’ போட்டி வையுங்கள். நான் கடைசி பரிசாவது வாங்குவேன். (Confidence is life).

  • 29. basheer  |  October 31, 2008 at 2:54 pm

    இன்வெஸ்டர்
    டிரேடர்
    கவிஞர்!

  • 30. Anonymous  |  November 9, 2008 at 7:56 pm

    கருப்பர்
    ஆளும்
    வெள்ளைமாளிகை!

  • 31. BARANI  |  November 9, 2008 at 9:05 pm

    //மாபெரும் ஹைக்கூ போட்டி//

    ஒலியெளுந்ததே
    ஒளி
    ஒழிந்ததால்…!!!

    (ஹைக்கூவுக்கு விளக்கம் ஆர்காட்டாரைக் கேட்டால் மட்டுமே தெள்ளத் தெளிவாகத் புரியும்)

  • 32. NANDHA  |  July 13, 2009 at 7:03 pm

    soory enaku haikoo varathu but abouve haikoo fine

  • 33. era.eravi  |  April 3, 2011 at 5:51 pm

    ஹைக்கூ

    குடல் பசியை போக்கிட
    உடல் விலை போகிறது
    விபச்சாரம்

    மிதப்பதாக நினைத்து
    மூழ்குபவன்
    குடிகாரன் …

    சுவரில் எழுதாதே !
    சுவர் முழுவதும்
    எழுதிருந்தது …

    அப்பாவும் மகனும்
    ஒரே வரிசையில்
    வேலைவாய்ப்பு அலுவலகம்

    விதவை வானம்
    மறுநாளே மறுமணம்
    பிறை நிலவு

    எழுத்தில் மட்டும்
    செயலில் இல்லை
    “வாய்மையே வெல்லும் ”

    கடவுளை நம்பினோர்
    கைவிடபடார்
    “சபரிமலையாத்திரை விபத்து ”

    கீர்த்தியால் பசி தீருமா ?
    ராமர் கோவிலால்
    ஏழைக்கு விடியுமா ?

    கவிஞர் இரா. இரவி, மதுரை


    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • 34. era.eravi  |  April 3, 2011 at 5:53 pm

    மின்தடை ஹைக்கூ
    பாதித்தவர்கள்
    சபிக்கிறார்கள்
    மின்தடை

    வெட்ட வெளிச்சமானது
    கையாலாகாத தனம்
    மின்தடை

    அறிவித்து பாதி
    அறிவிக்காமல் மீதி
    மின்தடை

    தாமஸ் ஆல்வாய் எடிசனை
    தினமும் நினைவூட்டுகின்றனர்
    மின்தடை

    தடையின்றி
    கொசுக்கள் ரிங்காரம்
    மின்தடை

    வந்தது வெறுப்பு
    வாக்குப் பெற்றவர் மீது
    மின்தடை

    ஆளுங்கட்சியை தோற்கடிக்க
    ஏதிர்க்கட்சி வேண்டாம்
    மின்தடை போதும்

    விவசாயம் பாதிப்பு
    தொழில்கள் பாதிப்பு
    மின்தடை

    வல்லரசாவது இருக்கட்டும்
    நல்லரசாகுங்கள்
    மின்தடை

    வெளிநாடுகளில் இல்லை
    இந்தத் தொல்லை
    மின்தடை
    கவிஞர் இரா .இரவி

    0

    email


    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • 35. era.eravi  |  April 29, 2011 at 9:12 pm

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    பார்க்காதவர்கள் பாருங்கள்
    தேவதை
    என்னவள்

    நடந்து சென்றாள்
    கடந்து சென்றாள்
    கடத்திச்சென்றாள்

    சக்தியில்
    மின்சாரத்தை வென்றது
    அவள் கண்சாரம்

    வேண்டாம் வண்ணம்
    இயற்கையாகவே சிகப்பு
    அவள் இதழ்கள்

    உச்சரிப்பை விட
    அசைவே அழகு
    அவள் இதழ்கள்

    செவிகளை விட
    விழிகளுக்கு இன்பம்
    அவள்

    ஆயிரம்
    அர்த்தம் உண்டு
    மவுனத்திற்கு

    வருகிறது
    பெரு மூச்சு
    அவளை நினைத்தாலே

    இன்று நினைத்தாலும்
    மனதில் மகிழ்ச்சி
    அவள் புன்னகை

    கால்தடம் அழித்தது
    கடல் அலை
    உள்ளத்தின் தடம் ?

    முகம் சிரித்தாலும்
    அகம் அழுகின்றது
    காதல் தோல்வி

    சோகமான முடிவுகள்
    சுகமான சுமைகள்
    காதல் தோல்வி

    அருமை அறியாதவனிடம்
    அகப்பட்டால்
    வீணையும் விறகுதான்

    நடிகர்களின் ஆசை
    நடிகைகளையும் தொற்றியது
    வாரிசு அறிமுகம்

    ஒரே வரிசையில்
    தமிழ் அறிஞர்களும், ஆபாச நடிகைகளும்
    கலைமாமணி பட்டமளிப்பில்

    வில் அம்பு
    விளம்பரமோ ?
    அவள் விழிகள்

    இன்றும் காணலாம்
    டைனோசர்கள்
    அரசியல்வாதிகள்

    சுருங்கச்சொல்லி
    விளங்கவைத்தல்
    ஹைக்கூ

    வாடிக்கையானது
    காக்காக் குளியல்
    பெரு நகரங்களில்

    ராமன் ஆண்டாலும்
    ராவணன் ஆண்டாலும்
    ஒழியவில்லை வறுமை

    உலகெலாம் பரவியது
    தேமதுரத் தமிழோசை அல்ல
    ஊழல் ஓசை

    பெருகப் பெருக
    பெருகுது வன்முறை
    மக்கள்தொகை

    பலதாரம் முடித்தவர்
    பண்பாட்டுப் பேச்சு
    ஒருவனுக்கு ஒருத்தி

    சிலைகளில் தெரிந்தது
    ஆடை அணிகலனும்
    சிற்பியின் சிறப்பும்

    கூட்டம் கூடுவதில்லை
    இலக்கிய விழாக்களுக்கு
    தொலைகாட்சிகளால்

    நிஜத்தை வென்றது நிழல்
    நாடகத்தை வென்றது
    திரைப்படம்


    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • 36. era.eravi  |  April 29, 2011 at 9:13 pm

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    ஆட்சியில் ஆள்பவர்களை விட
    மனதை ஆண்டவர்கள்
    மரித்த பின்னும் வாழ்கின்றனர்

    சிற்பி வீட்டு
    படிக்கல்லானாலும்
    சிலையாவதில்லை

    கோடிகள் கொள்ளை
    அடித்தாலும் முடிவு
    தற்கொலை கொலை

    பொம்மை உடைந்த போது
    மனசும் உடைந்தது
    குழந்தைக்கு

    தடியால் அடித்து
    கனிவதில்லை கனி
    குழந்தைகளும்தான்

    அனைவரும் விரும்புவது
    அதிகாரம் அல்ல
    அன்பு

    நிலம் விற்றுப்
    பெற்றப் பணத்தில்
    அப்பாவின் முகம்

    கால்களைத் தொட்டு
    வணங்கிச் சென்றன
    அலைகள்

    சிற்பி இல்லை
    சிற்பம் உண்டு
    நிலையானது எது ?

    போட்டியில் வென்றது
    புற அழகை
    அக அழகு

    நான் கடவுள் என்பவன்
    மனிதன் அல்ல
    விலங்கு

    அவளுக்கும் உண்டு
    மனசு மதித்திடு
    மனைவி

  • 37. era.eravi  |  April 29, 2011 at 9:14 pm

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உருண்டது
    உலோகக் குண்டென
    தாமரையிலைத் தண்ணீர்

    வானிலிருந்து வரும்
    திரவத்தங்கம்
    மழை

    இரண்டும் சமம்
    மலை மண்
    மழைக்கு

    கழுவும் நீரே
    அழுக்கு
    சுத்தம் ?

    ஓய்வுக்கு ஒய்வு
    தந்தால்
    சாதிக்கலாம்

    சாதனைக்கு
    முதல் எதிரி
    சோம்பேறித்தனம்

    தண்ணீரைப் பெட்ரோலாக்கி
    வித்தைக் காட்டியவரிடம்
    வித்தைக் காட்டியது இயற்கை

    எலி மீது யானை
    எப்படிச் சாத்தியம்
    பிள்ளையார்

    கருவறை உள்ள
    நடமாடும் கடவுள்
    தாய்

    பல் பிடுங்கிய
    பாம்பாக
    தோற்ற அரசியல்வாதி

    இன்றும் சொல்கின்றது
    மன்னனின் பெயரை
    அரண்மனை

    பெருமூச்சு விட்டாள்
    தங்கக்கோபுரம் பார்த்து
    முதிர்கன்னி

    கல்லுக்குள் தேரை
    பறைக்குமேல் செடி
    மனிதனுக்குள் மனிதநேயம் ?


    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • 38. era.eravi  |  April 29, 2011 at 9:17 pm

    ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

    எலிக்கு எதிரி
    குட்டிக்கு நண்பன்
    பூனையின் பல்…

    எல்லோரும் மகிழ்வாய்
    திருமண வீட்டில்
    தந்தை கடன் கவலையில்…

    கையில் வாங்கினான்
    அருகில் ஈட்டிக்காரன்
    ஊதியம்?…

    முரண்பாடு
    யானைக் கறுப்பு
    பேயரோ வெள்ளைச்சாமி…

    வந்த வழி தெரியாது
    செல்ல வழி கிடையாது
    காதல்…

    முயன்றதால் முடிந்தது
    உழைப்பினால் உருவானது
    குருவிக்கூடு…

    பிறர் சேமிப்பை
    அபகரித்தான் மனிதன்
    தேன்கூடு

    கண்ணால் காண்பதும் பொய்
    தேயும் தேய்வதில்லை
    நிலவு…

    அன்று கண்ணியம்
    இன்று களங்கல்
    கூட்டுறவு வங்கி…

    கொத்தனார் பணி
    அரசியல் பணியானது
    இடிப்பது கட்டுவது…

  • 39. era.eravi  |  April 29, 2011 at 9:18 pm

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மன்னராட்சியையும் வென்றார்கள்
    அரசியல்வாதிகள்
    குடும்ப அரசியிலில்

    மனிதனால் படைக்கப்பட்டு
    மனிதனையேப் படுத்துகின்றது
    பணம்

    எங்கு ?முறையிடுவது
    ஆண் காவலர்களால்
    பெண் காவலர்களுக்குத் தொல்லை

    அவள் தந்த
    சங்கு பயன்பட்டது
    இறுதி ஊர்வலத்திற்கு

    சவுக்குமரம்
    பார்க்கையில்
    அவள் நினைவு

    தமிழைக் காத்ததில்
    பெரும்பங்குப் பெற்றன
    பனை மரங்கள்

    தமிழை அழிப்பதில்
    பெரும்பங்குப் பெற்றன
    தொலைக்காட்சிகள்

    மூடநம்பிக்கையால்
    முற்றுப் பெற்றது
    சேதுகால்வாய்த் திட்டம்

    இடித்ததால்
    இடிந்தது மனிதநேயம்
    பாபர் மசூதி

    எட்டாவது அதிசயம்
    ஊழலற்ற
    அரசியல்வாதி

    மூச்சுக்காற்று வெப்பமானது
    ஏழை முதிர்கன்னிக்கு
    தங்கத்தின் விலையால்

    திரும்புகின்றது
    கற்காலம்
    மின்தடை

    கருவறையில் உயிர்ப்பு
    கல்லறையில் துயில்வு
    இடைப்பட்டதே வாழ்க்கை

    எல்லோரும் சிரிக்க
    அழுது பிறந்தது
    குழந்தை

    எல்லோரும் அழ
    அமைதியாக இருந்தது
    பிணம்

    நடமாடும் நயாகரா
    நடந்துவரும் நந்தவனம்
    என்னவள்

    பெயருக்கு காதலிக்கவில்லை
    பெயரையே காதலித்தேன்
    மலரும் நினைவுகள்

    அதிக வெளிச்சமும்
    ஒருவகையில் இருட்டுத்தான்
    எதுவும் தெரியாது

    கூந்தல் மட்டுமல்ல
    வாயும் நீளம்தான்
    அவளுக்கு


    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • 40. era.eravi  |  April 29, 2011 at 9:20 pm

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    ஓராயிரம் பொருள் கிடைக்கும்
    உற்று நோக்கினால்
    படைப்பதற்கு

    மேடுகளைத் தகர்த்து
    பள்ளம் நிரப்பு சமத்துவம்
    பொதுவுடமை

    விழி இரண்டு போதாது
    வனப்பை ரசிக்க
    வண்ண மலர்கள்

    ஒய்வதில்லை
    விண்ணும் மண்ணும் அலையும்
    ஒய்ந்திடும் மனிதன்

    வெட்ட வெட்ட
    வளரும் பனைமரம்
    பாராட்ட வளரும் குழந்தை

    குடியால் கோடிகள் திரட்டி
    கோடித் துணி தந்தனர்
    ஏழைகளுக்கு

    புதிய பொருளாதாரம்
    கல்வி தனியார் மயம்
    மது அரசுமயம்

    உருவமின்றியும்
    தேசப்படுத்தியது வாழையை
    காற்று

    அன்றே அநீதி
    ஆண்களுக்கு கை சிலம்பு
    பெண்களுக்கு கால் சிலம்பு

    இருப்புப் பாதையில்
    இருப்பின்றி பயணம்
    தொடர் பயணம்

    கழிவுநீர் உறிஞ்சி
    இளநீர் தரும்
    உயர்ந்த தென்னை

    யார் உயர் திணை
    மோதி விழும் மனிதன்
    கூடி வாழும் பறவைகள்

    விளைவித்தன கேடு
    கண்ணிற்கும் மனதிற்கும்
    தொல்(ல்) லைக்காட்சிகள்

    தரம் தாழ்ந்தால்
    களையாகும்
    கலை

    மாடு செரிப்பதற்கும்
    மனிதன் மகிழ்வதற்கும்
    உதவிடும் அசைபோடுதல்

    போராட்டம் நடிப்பு அரசியலில்
    பேராட்டமே வாழ்க்கை
    ஏழைகளுக்கு

    கண்ணிற்கு குளிர்ச்சி
    மனதிற்கு மகிழ்ச்சி
    இயற்கை

    மனம் வருந்துவதில்லை
    மங்கையர் சூடாததற்கு
    எருக்கம் பூக்கள்

    அங்கிகரிக்கப்பட்ட
    சூதாட்டம்
    பங்குச்சந்தை

    உழைக்காமல் உண்பது
    திருட்டு
    உழைப்பே உயர்வு

    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • 41. era.eravi  |  April 29, 2011 at 9:21 pm

    காதல் ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    அன்றும் இன்றும்
    என்றும் இனிக்கும்
    காதல்

    உணர்ந்தவர்களுக்கு மட்டும்
    புரிந்திடும் உன்னத சுகம்
    காதல்

    கற்காலம் முதல்
    கணிப்பொறி காலம் வரை
    காதல்

    செல்ல வழி உண்டு
    திரும்ப வழி இல்லை
    காதல்

    கண்களில் தொடங்கி
    கண்ணிரில் முடியும்
    சில காதல்

    காவியத்திலும்
    கணினியுகத்திலும்
    இனிக்கும் காதல்

    விழியால் விழுங்குதல்
    இதழால் இணைதல்
    காதல்

    இரசாயண மாற்றம்
    ரசனைக்குரிய மாற்றம்
    காதல்

    விழி ஈர்ப்பு விசை
    எழுப்பும் இனிய இசை
    காதல்

    சிந்தையில் ஒரு மின்னல்
    உருவாக்கும் ஒரு மின்சாரம்
    காதல்

    வானில் மிதக்கலாம்
    உலகை மறக்கலாம்
    காதல்

    பெற்றோரை விட
    பெரிதாகத் தோன்றும்
    காதல்


    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • 42. era.eravi  |  April 29, 2011 at 9:24 pm

    குறும்பாக்கள் இரா. இரவி – மதுரை 1

    (o) எதிர்பாராமல் என்பார்கள்
    திட்டமிட்டே நடக்கும்
    ரவுடி கொலை.

    (o) தாராளமாகக் கொள்ளை
    பன்னாட்டு நிறுவனங்கள்
    தாராளமயம்.

    (o) அரசியல்வாதிக்கு இலாபம்
    பொதுமக்களுக்கு நட்டம்
    உலகமயம்.

    (o) டெல்லிக்குப் பயணம்
    தமிழகத் தலைவர்கள்
    தண்ணீருக்காக அல்ல சிலைக்காக.

    (o) இலவச டிவி கியாஸ் சரி
    இலவச மணமகன்
    எப்போது?

    (o) வெள்ளையனே வெளியேறு அன்று
    கொள்ளையனே வருக வருக இன்று
    புதிய பொருளாதாரம்

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
October 2008
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031