Archive for August 14th, 2008
14-08-2008
சென்ற வெள்ளிக் கிழமையிலிருந்து சொன்னதையே திருப்பி சொல்வதை தவிர வேறு வழியில்லை. சிறு முதலீட்டாளர்கள் சந்தை மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். அனைவரும் சந்தை இறங்கினாலொழிய முதலீடு செய்ய போவதில்லை என்பதால், சந்தையின் Volume மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த நேரத்தில் சந்தையை சில ஆபரேட்டர்கள் மேலேற்றி, அனைத்தும் நன்றாகவே உள்ளன என்ற பிரமையை ஏற்படுத்த முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.
பாரதி ஏர்டெல்லை நாம் ரு.900/- வாங்க தயாராக இல்லை. அதுபோலவே, மற்ற நிப்டி பங்குகளையும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்க தயாராக இல்லை. சந்தையின் ஏற்றத்தை பற்றி ஒரு சந்தேகம் இருப்பதால் இவ்வளவு தயக்கம். இதனால் சந்தையும் 4600 கடக்க பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனில்லை.
பார்ப்போம். இன்றைக்கு என்ன செய்கிறார்கள் என்று. இன்றைக்கும் சந்தை தான். பி-நோட்டுகள் தொடர்பாக செபி வெளியிட்ட அறிக்கையை Negative News என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற வருடம் செபியின் பி-நோட்டுகள் அறிக்கையின் போது காளைச் சந்தையிலேயே சந்தை சரிந்து ஒரு மணி நேரம் இடைவெளி விட வேண்டியிருந்தது நினைவிலிருக்கும். அதே நிலைமை தான். இன்றைக்கும்.
Stay Alert and Watch!
Proud to be an Indian and Happy Independence Day!
3 comments August 14, 2008