30-07-2008
July 30, 2008
என் இணையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நேற்று எழுத இயலவில்லை.
ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது போல் பணவீக்கத்தை அடுத்த தேர்தலுக்குள் கட்டுப்படுத்த எதிர்வினையாற்றி இருக்கிறது. அதற்கு சந்தையும் 150-க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்திருக்கிறது. தற்சமயம் Negative செய்திகள் ஏதும் இல்லையென்பதாலும், அனுசக்தி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற Positive செய்திகளாலும் இன்னும் சில நாட்களுக்கு சந்தை மேலேற வாய்ப்புண்டு. சந்தையின் ரெசிஸ்டென்ஸ் 4575 புள்ளிகளில் உள்ளது என நினைக்கிறேன். அதையும் தாண்டும் பட்சத்தில் சந்தை 4650 புள்ளிகளை தாண்ட வாய்ப்புள்ளது.
ஆனால் அடிப்படை வலுவிழந்து உள்ளதால், இந்த ஏற்றங்களெல்லாம் தற்காலிகமாகவே இருக்கும். குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து மாட்டிக் கொள்ள ஏதுவாக விரிக்கப்பட்ட வலைகள் என்று கூட சொல்லலாம். சந்தையின் இறக்கங்கள் வெகு வேகமாக இருக்கும். சந்தை 4500 கடந்த நிலையிலும் Negative செய்தியை பொறுத்து வெகு வேகமாக சரியவே வாய்ப்புள்ளது.
அமெரிக்க சந்தை 250 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் Positive ஆக தொடங்கியுள்ளன. நமது சந்தையும் 100 புள்ளிகளுக்கு மேல் ஆக தொடங்க வாய்ப்புள்ளது. தற்சமயம் சந்தையின் போக்கை தடுக்கும் காரணிகள் : பெரிய தலைகள் செய்ய ஆரம்பித்தல், குண்டு வெடிப்புகள் மட்டுமே. சில பங்குகள் consolidate ஆகி தங்களுடைய சப்போர்ட் நிலையில் உறுதியாக உள்ளன என்பதை கவனித்திருப்பீர்கள். இச்சமயங்களில் அம்மாதிரி பங்குகளை வாங்கும் பட்சத்தில் சந்தையின் தற்காலிக உயர்வில் மேலெற வாய்ப்பு உள்ளன.
Enjoy the Temporary Bull Run!
Entry Filed under: Market Analysis. .
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
balakeethai | July 30, 2008 at 7:11 am
Realy superb MR.Alex,
very sharp anlysis
2.
naveen | July 30, 2008 at 7:34 am
good morning sir, thank you
3.
batcha | July 30, 2008 at 7:46 am
thank for your continue support sir