பெரியவரு

July 25, 2008

     நகரத்திலிருந்து நுாற்றி இருபத்தியெட்டு கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்தது அந்த மலை. மிகவும் பழமையான மலை. காற்று மிகவும் சுத்தமாக இருந்தது. மலையை போர்த்தியபடி அடர்ந்த காடு. நகரத்தின் சத்தத்தில் வசித்தவர்கள் இம்மாதிரி ஒரு ஏகாந்தமான இடத்தை கண்டிப்பாக விரும்புவார்கள். இதற்காக  சற்று அதிகமாக செலவழிக்கவும் தயங்க போவதில்லை.

      இந்த இடத்தை பற்றிய என்னுடைய அறிக்கையை நாளை நண்பகலுக்குள் நான் சமர்ப்பிக்க வேண்டும். இடம் நன்றாக தான் இருக்கிறது. மக்கள் நடமாட்டம் குறைவாக …. சுத்தமாக இல்லை. ஏகாந்தமான இடம். அரசிடமிருந்து வெகு எளிதாக பர்மிட் பெற்று விடலாம். பாதுகாக்கப்பட்ட மிருக இனங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. மரங்கள் தான் பெரிது பெரிதாக இருக்கின்றன. பகல் நேரத்தில் காடுகளில் வழக்கமாக இருக்கும் பறவையொலிகளை கூட …

“சார், வண்டி என்ஜீன் சூடாயிடுச்சி. ஒரு முக்கா மணிநேரம் கழிச்சி தான் கிளம்ப முடியும்”
“ஏம்பா, நான் இன்னும் ஒரு மணிநேரத்துல ஆபிசுல இருக்கனும்”
” இறக்கம் தானே சார், போயிடலாம். அப்டியே ஒரு வாக் போய் வாங்க சார். கெளம்பிடலாம்”

     சாலை என்று பெரிதாக ஒன்றுமில்லை. காட்டுபாதை தடம். நடக்க நடக்க உற்சாகமாக இருந்தது. இங்கே ரிசார்ட் கட்டிய பிறகு ஒரு நாள் வந்து குடும்பத்துடன் வந்து தங்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு செயற்கை அருவி மாதிரி உருவாக்கலாம்.

     வாவ், என்ன இது. செதுக்கிய மாதிரி ஒரு பாதை. பாதையையொட்டி அழகான மலர்கள். ஒவியத்தில் வரைந்ததுபோல் இருக்கிறது. பாதை மெத்தென நடக்க சுகமாக இருக்கிறது. பதினைந்து நிமிஷம் ஆயிருக்கும்.சரி, திரும்பிவிடலாம்.

“நீ தான் பிளஷருல வந்த ஆளா?”

     சிக்குபிடித்த தலையும், அட்டை கருப்பாக வயதான ஆள். பார்க்கவே பயமாக இருந்தது. எந்த ஆயுதமும் இல்லை. வெறும் கோவணம் மட்டுந்தான். வேறு யாராச்சும் இருக்கிறார்களா? இல்லை.

“பெரியவரே, நீங்க யாரு?”

“நா இங்கதான் இருக்கேன். ரொம்ப நாளா.”

      பழங்குடியினர் போலும். பார்த்தால் படிப்பறிவு சுத்தமாக இல்லை என்று தோன்றுகிறது. ஒருமாதிரி இழுத்து இழுத்து பேசுகிறார். ஏதேனும் தொண்டு நிறுவனங்கள் பின்னணியில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

“எவ்ளோ நாளா இங்கே இருக்கீங்க?”
“ரொம்ப நாளா”
“நீங்க மட்டுந்தானா?”
“எங்குடும்பம். அப்றம் பெரியவரு”

     எண்ணிக்கை சுமாராக ஐம்பதுக்கள் தான் இருக்க வேண்டும். பெரியவரு தான் நாட்டாமை போல. பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

“பெரியவர் எங்கே இருக்காரு?”
“வா. கூட்டிட்டு போறேன்.”
” இந்த பாதை ரொம்ப அழகா இருக்கு? யாரும் இதில நடக்கறது இல்ல போல இருக்கே”
“உனக்கு முன்னாடி ரெண்டு பேர் இதில நடந்து போயிருகாங்க.”
“பெரியவரும் இங்கேயே தான் ரொம்ப நாளா இருக்காரா?”
“ஆமா. வடக்க பெரிய சண்ட நடந்து அடிபட்டு வந்தவரு இங்கேயே தங்கிட்டாரு.”

கடவுளே, வடக்கே வெறும் கடல்தானே இருக்கு. இலங்கையிலிருந்து வந்திருப்பாரோ. விடுதலை புலி மாதிரி.

“ஏன் பெரியவரே, நீங்களே ரொம்ப வயசா தெரியறிங்க. உங்க பெரியவரு உங்களை விட வயசானவரா?”
“வயசுலயும் பெரியவரு.”

“எப்ப இங்கே வந்தாரு?”
“ரொம்ப நாளைக்கு முன்னாடி.”

“”எந்த ஊர்ல இருந்து வந்தாரு?”
“அதான் கடல் கடந்து வந்தாருன்னு சொன்னேன்ல.”
“வந்து ஒரு இருபது வருஷத்துக்கு மேல இருக்குமா?”
“அதுக்கும் மேல இருக்கும்”

 

 இப்பதான் நிம்மதியா இருக்கு. இவரவிட வயசானவராயிருந்தால் ஒரு எழுபது வயசாவது இருக்க வேண்டும். எளிதில் சமாளித்து விடலாம்.
” இன்னும் எவ்ளோ துாரம் பெரியவரே?”
“கொஞ்ச துாரம் தான்.”
“ஏன் பெரியவரே, இங்கே நரி, குரங்கெல்லாம் நிறைய இருக்குமா?”
“அங்க இங்க நரி இருக்கும். குரங்கு இருக்காது.”
” இவ்ளோ பெரிய மரம்லாம் இருக்கும் போது குரங்கு இல்லைன்னா எப்படி?”
“பெரியவருக்கு குரங்குன்னா பிடிக்காது.”

 

 

.”

Entry Filed under: கதை. .

9 Comments Add your own

  • 1. இரா. வசந்த குமார்.  |  July 27, 2008 at 7:36 am

    ஐயா…

    புரிந்தும் புரியாமலும் இருக்குங்க சார்…

  • 2. batcha  |  July 27, 2008 at 8:16 am

    கதை அவ்வளவு தானா ?

  • 3. Nandhu f/o Nila  |  July 28, 2008 at 7:20 am

    பெரியவரு யாருங்க ராவணனா?

  • 4. sharehunter  |  July 29, 2008 at 8:02 pm

    நன்றி, வசந்த குமார், நந்து.

    சரியான கோணத்தில் புரிந்து கொண்டீர்கள்.

    josh

  • 5. Blog Indian  |  July 31, 2008 at 8:05 am

    Lemme stretch a little far.

    The land is somewhere south of Srilanka, some sort of the mythical Lemuria.

    The local people were the aborigins, they were chased south after their defeat in the great war for “her”.

    Later the land is disconnected due to submerge from raising sea water.

    Now, the land is called Australia.

  • 6. Balaji  |  August 20, 2008 at 1:20 pm

    avalo thaan kathaya ??? ennappa ????

    Cheers
    Balaji

  • 7. S.Kanagavel  |  August 28, 2008 at 8:40 am

    very nice & incompleted story (my view)

  • 8. செல்வ கருப்பையா  |  September 8, 2008 at 11:05 pm

    கதை ரொம்ப நல்லாருக்குங்க. முன்னாடி படிச்சப்பவே பின்னூட்டம் போடணுமுன்னு நெனைச்சேன் – ஆனா உங்க blog name மறந்துட்டேன். Please write more in these lines

  • 9. SHANKAR VISVALINGAM  |  February 22, 2009 at 5:53 pm

    பாதை முடிவடைய, ஒர் சிறிய கோவில் போன்ற கட்டிடம்.அழகான அமைதி. பெரியவர் இளமையாகத் தெரிந்தார். என்னை நெருங்கிய நடையில் ஒர் கம்பீரம்.
    “வா, ராமா, சீதையை உயிர்ப்பிக்கும் நேரம் வந்து விட்டது” என்றார் பெரியவர்.

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031