29.05.2008
May 29, 2008
மாதத்தின் கடைசி வியாழன் கிழமை. சந்தை இன்று Positive ஆக ஆரம்பித்தாலும், ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். இந்தியன் ஆயில் கார்பரெஷன் (IOC) இந்த காலாண்டு அறிக்கையில் நஷ்டத்தை காட்டியுள்ளது இச்சமயத்தில் குறிப்பிடதக்க ஒரு செய்தியாகும்.
சந்தை இன்று 5,000 புள்ளிகளை தொடுவதற்கு வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன். அதே புள்ளிகளில் முடியுமா என்பது வேறு விஷயம். பங்கு சந்தைக்கு புதியவர்கள் இன்று தின வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏதேனும் பங்குகள் விற்பதற்கு முயன்றால் உங்கள் விலையை போட்டு விட்டு நகர்ந்து விடுவது நல்லது.
இன்னும் ஒரு மாத காலத்திற்கு பங்கு முதலீட்டுக்காக நீங்கள் ஒதுக்கியுள்ள தொகையில் சுமார் 20 சதவிதம் ரொக்கமாக பங்கு தரகர் அலுவலகத்தில் இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம்.
Entry Filed under: Market Analysis. .
Trackback this post | Subscribe to the comments via RSS Feed